என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிரிய விஷவாயு தாக்குதலில் சரீன் வாயு பயன்படுத்தப்பட்டதாக தகவல்
Byமாலை மலர்20 April 2017 1:03 AM GMT (Updated: 20 April 2017 1:03 AM GMT)
சிரிய விஷவாயு தாக்குதலில் பெறப்பட்ட மாதிரிகளை சோதனை செய்ததில் சரீன் வாயு பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
தி ஹாகூ:
சிரியாவில் கடந்த ஏப்ரல் 4-ல் நடத்தப்பட்ட விஷவாயு தாக்குதலில் சரீன் வாயு பயன்படுத்தப்பட்டுள்ளதாக வேதியியல் சோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து அரசுக்கு ஆதரவான விமானப்படையின் போர் விமானங்கள் கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி ரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியது.
இட்லிப் மாகாணத்தின் மத்திய பகுதியில் உள்ள கான் ஷெய்க்குன் நகரில் போராளிகள் வாழும் பகுதியில் நடத்தப்பட்ட இந்த விஷவாயு தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 87 பேர் உயிரிழந்தனர்.
இந்த விஷவாயு தாக்குதலுக்கு ரஷ்ய மற்றும் சிரிய ராணுவம் தான் காரணம் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குளோரின் விஷ வாயுவை பீப்பாயில் அடைத்து சிரிய ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் வீசியதாக இந்த தாக்குதல் தொடர்பாக ஐ.நா. சபை செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இந்த தாக்குதலில் சரீன் வாயு பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்க சோதனையில் தெரிய வந்துள்ளது.
தாக்குதலில் பாதிக்கப்பட்ட 10 பேரிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளை இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பின் (ஓ.பி.சி.டபிள்யூ) ஆய்வகத்தில் வைத்து சோதனை செய்ததில் சிரின் வாயு பயன்படுத்தி இருப்பதை கண்டறிந்த விஞ்ஞானிகள், சரீன் வாயுவை பயன்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது என்றும் கூறியுள்ளனர். மேலும் 7 பேரிடம் இருந்து பெறப்பட்டுள்ள மாதிரிகள் இருவேறு ஆய்வகங்களில் சோதனை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் பலரிடம் இருந்து மாதிரிகள் பெறப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து ஓட்டெடுப்பு நடத்தி மீண்டும் விவாதிக்க, அதிகாரிகள் குழு நாளை கூட உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் கடந்த ஏப்ரல் 4-ல் நடத்தப்பட்ட விஷவாயு தாக்குதலில் சரீன் வாயு பயன்படுத்தப்பட்டுள்ளதாக வேதியியல் சோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து அரசுக்கு ஆதரவான விமானப்படையின் போர் விமானங்கள் கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி ரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியது.
இட்லிப் மாகாணத்தின் மத்திய பகுதியில் உள்ள கான் ஷெய்க்குன் நகரில் போராளிகள் வாழும் பகுதியில் நடத்தப்பட்ட இந்த விஷவாயு தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 87 பேர் உயிரிழந்தனர்.
இந்த விஷவாயு தாக்குதலுக்கு ரஷ்ய மற்றும் சிரிய ராணுவம் தான் காரணம் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குளோரின் விஷ வாயுவை பீப்பாயில் அடைத்து சிரிய ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் வீசியதாக இந்த தாக்குதல் தொடர்பாக ஐ.நா. சபை செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இந்த தாக்குதலில் சரீன் வாயு பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்க சோதனையில் தெரிய வந்துள்ளது.
தாக்குதலில் பாதிக்கப்பட்ட 10 பேரிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளை இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பின் (ஓ.பி.சி.டபிள்யூ) ஆய்வகத்தில் வைத்து சோதனை செய்ததில் சிரின் வாயு பயன்படுத்தி இருப்பதை கண்டறிந்த விஞ்ஞானிகள், சரீன் வாயுவை பயன்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது என்றும் கூறியுள்ளனர். மேலும் 7 பேரிடம் இருந்து பெறப்பட்டுள்ள மாதிரிகள் இருவேறு ஆய்வகங்களில் சோதனை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் பலரிடம் இருந்து மாதிரிகள் பெறப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து ஓட்டெடுப்பு நடத்தி மீண்டும் விவாதிக்க, அதிகாரிகள் குழு நாளை கூட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X