என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொலை வீடியோவை வெளியிட்ட பேஸ்புக் கொலைகாரன் தற்கொலை
Byமாலை மலர்19 April 2017 12:47 PM GMT (Updated: 19 April 2017 12:47 PM GMT)
கொலை வீடியோவை வெளியிட்ட 'பேஸ்புக்' கொலைகாரனை, போலீசார் பிடிப்பதற்காக விரட்டிச் சென்றபோது அவன் தற்கொலை செய்து கொண்டான்.
நியூயார்க்:
அமெரிக்காவின் ஒகியோவை சேர்ந்தவன் ஸ்டீவ் ஸ்டீபன்ஸ் (37). இவன், ஈஸ்டர் பண்டிகை அன்று விருந்து முடிந்து தனது வீட்டுக்கு நடந்து சென்ற 74 வயது முதியவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.
அந்த வீடியோவை 'பேஸ்புக்' இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினான். மேலும் தான் 14 வயதில் இருந்து இதுவரை 13 பேரை கொலை செய்துள்ளதாகவும் தெரிவித்து இருந்தான்.
எனவே அவனை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இவன் மனநிலை பாதிக்கப்பட்டவன். எனவே அவன் பலரை கொலை செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே கவனமாக இருக்கும்படி 5 மாகாண பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் இருந்தனர்.
மேலும் அவன் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.33 லட்சம் (50 ஆயிரம் டாலர்) பரிசு வழங்குவதாகவும் அறிவித்து இருந்தனர்.
போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் கொலையாளி ஸ்டீவ் ஸ்டீபன்ஸ் தற்கொலை செய்து கொண்டான். இவனை பென்சில்வேனியாவில் போலீசார் விரட்டி சென்றபோது காரில் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஒகியோவை சேர்ந்தவன் ஸ்டீவ் ஸ்டீபன்ஸ் (37). இவன், ஈஸ்டர் பண்டிகை அன்று விருந்து முடிந்து தனது வீட்டுக்கு நடந்து சென்ற 74 வயது முதியவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.
அந்த வீடியோவை 'பேஸ்புக்' இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினான். மேலும் தான் 14 வயதில் இருந்து இதுவரை 13 பேரை கொலை செய்துள்ளதாகவும் தெரிவித்து இருந்தான்.
எனவே அவனை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இவன் மனநிலை பாதிக்கப்பட்டவன். எனவே அவன் பலரை கொலை செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே கவனமாக இருக்கும்படி 5 மாகாண பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் இருந்தனர்.
மேலும் அவன் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.33 லட்சம் (50 ஆயிரம் டாலர்) பரிசு வழங்குவதாகவும் அறிவித்து இருந்தனர்.
போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் கொலையாளி ஸ்டீவ் ஸ்டீபன்ஸ் தற்கொலை செய்து கொண்டான். இவனை பென்சில்வேனியாவில் போலீசார் விரட்டி சென்றபோது காரில் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X