என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்க வாழ் இந்திய சி.இ.ஓ-க்கு 1,35,000 அமெரிக்க டாலர் அபராதம்
Byமாலை மலர்19 April 2017 12:37 AM GMT (Updated: 19 April 2017 12:37 AM GMT)
தன்னிடம் பணிபுரிந்த பெண் ஊழியரை கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக அமெரிக்க வாழ் இந்திய தலைமை செயல் அதிகாரிக்கு 1,35,000 அமெரிக்க டாலரை அபராதமாக செலுத்த அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நியூயார்க்:
தன்னிடம் பணிபுரிந்த பெண் ஊழியரை கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக, 1,35,000 அமெரிக்க டாலரை (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 87 லட்ச ரூபாயை) நஷ்ட ஈடாக வழங்கக் கோரி அமெரிக்க வாழ் இந்திய தலைமை செயல் அதிகாரிக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் ‘ரோஸ் இன்டர்நேஷனல் அன்ட் ஐ.டி. ஸ்டாபிங்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருப்பவர், ஹிமான்சு பாட்டியா. இந்தியப் பெண். இவர் அங்கு சான்ஜூவான் கேபிஸ்டிரானோ என்ற இடத்தில் வசித்து வருகிறார். இவர் வீட்டில் இந்தியாவை சேர்ந்த ஷீலா நிங்க்வால் என்ற பெண் வேலை பார்த்து வந்தார்.
இந்தப் பெண்ணை ஹிமான்சு பாட்டியா, ஒரு நாளில் சுமார் 15½ மணி நேரம் வேலை செய்ய வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வாரத்தில் ஒரு நாள்கூட விடுமுறை கொடுக்காமல் வேலை வாங்கி இருக்கிறார். உணவுடன் மாத சம்பளமாக 400 டாலர் (சுமார் ரூ.26 ஆயிரம்) மட்டுமே தந்துள்ளார்.
அதே நேரத்தில் வேலைக்காரப் பெண்ணுக்கு உடல் நலமில்லாதபோது, அவரை தன் வீட்டு செல்ல நாய்களுடன் ஹிமான்சு பாட்டியா தூங்க வைத்துள்ளார். அத்துடன் தான் வெளியே செல்கிற நாட்களில் வேலைக்காரப் பெண்ணுக்கு சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்டுள்ளார். அவரது பாஸ்போர்ட்டையும் பறித்து வைத்துள்ளார். சுதந்திரமாக வெளியே செல்லவும் அந்தப் பெண்ணை அனுமதிக்கவில்லை.
ஒரு கட்டத்தில் அந்த வேலைக்காரப் பெண், தொழிலாளர் சட்டங்கள் பற்றி இணையதளத்தில் தேடிப்பார்த்தபோது, அதைக் கண்டுபிடித்து, அவரை ஹிமான்சு பாட்டியா வேலையில் இருந்து நிறுத்தி விட்டார்.
இது தொடர்பான புகாரின் பேரில் ஹிமான்சு பாட்டியா மீது அமெரிக்க தொழிலாளர் நலத்துறை கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் அவர் தொழிலாளர் நலச்சட்டங்களை மீறி செயல்பட்டதாக குற்றத்திற்காக 1,35,000 அமெரிக்க டாலரை ஷீலா நிங்க்வாலுக்கு நஷ்ட ஈடாக வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன்னிடம் பணிபுரிந்த பெண் ஊழியரை கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக, 1,35,000 அமெரிக்க டாலரை (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 87 லட்ச ரூபாயை) நஷ்ட ஈடாக வழங்கக் கோரி அமெரிக்க வாழ் இந்திய தலைமை செயல் அதிகாரிக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் ‘ரோஸ் இன்டர்நேஷனல் அன்ட் ஐ.டி. ஸ்டாபிங்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருப்பவர், ஹிமான்சு பாட்டியா. இந்தியப் பெண். இவர் அங்கு சான்ஜூவான் கேபிஸ்டிரானோ என்ற இடத்தில் வசித்து வருகிறார். இவர் வீட்டில் இந்தியாவை சேர்ந்த ஷீலா நிங்க்வால் என்ற பெண் வேலை பார்த்து வந்தார்.
இந்தப் பெண்ணை ஹிமான்சு பாட்டியா, ஒரு நாளில் சுமார் 15½ மணி நேரம் வேலை செய்ய வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வாரத்தில் ஒரு நாள்கூட விடுமுறை கொடுக்காமல் வேலை வாங்கி இருக்கிறார். உணவுடன் மாத சம்பளமாக 400 டாலர் (சுமார் ரூ.26 ஆயிரம்) மட்டுமே தந்துள்ளார்.
அதே நேரத்தில் வேலைக்காரப் பெண்ணுக்கு உடல் நலமில்லாதபோது, அவரை தன் வீட்டு செல்ல நாய்களுடன் ஹிமான்சு பாட்டியா தூங்க வைத்துள்ளார். அத்துடன் தான் வெளியே செல்கிற நாட்களில் வேலைக்காரப் பெண்ணுக்கு சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்டுள்ளார். அவரது பாஸ்போர்ட்டையும் பறித்து வைத்துள்ளார். சுதந்திரமாக வெளியே செல்லவும் அந்தப் பெண்ணை அனுமதிக்கவில்லை.
ஒரு கட்டத்தில் அந்த வேலைக்காரப் பெண், தொழிலாளர் சட்டங்கள் பற்றி இணையதளத்தில் தேடிப்பார்த்தபோது, அதைக் கண்டுபிடித்து, அவரை ஹிமான்சு பாட்டியா வேலையில் இருந்து நிறுத்தி விட்டார்.
இது தொடர்பான புகாரின் பேரில் ஹிமான்சு பாட்டியா மீது அமெரிக்க தொழிலாளர் நலத்துறை கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் அவர் தொழிலாளர் நலச்சட்டங்களை மீறி செயல்பட்டதாக குற்றத்திற்காக 1,35,000 அமெரிக்க டாலரை ஷீலா நிங்க்வாலுக்கு நஷ்ட ஈடாக வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X