என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவருக்கு 20 ஆண்டு சிறை: இலங்கை கோர்ட்டு தீர்ப்பு
Byமாலை மலர்29 March 2017 9:43 PM GMT (Updated: 29 March 2017 9:43 PM GMT)
விடுதலைப்புலிகளுடன் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டு இருப்பது அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டதால் நாதனுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி இலங்கை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கொழும்பு:
2008-ம் ஆண்டு கொழும்பு நகர ரெயில் நிலையத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த பெண் மனித வெடிகுண்டு நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கு உதவி செய்ததாகவும், அவர்களுடன் சேர்ந்து தாக்குதலுக்கு கூட்டு சதியில் ஈடுபட்டதாகவும் கூறி பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், கனகசபை தேவதாசன் என்கிற நாதன் என்பவர் மீது கொழும்பு ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது தீர்ப்பு வழங்கிய நீதிபதி பியசேனா ரனசிங்கே, “குற்றம் சாட்டப்பட்டவர் மீது அவர் விடுதலைப்புலிகளுடன் இணைந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டு இருப்பது அரசு தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே நாதனுக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
2008-ம் ஆண்டு கொழும்பு நகர ரெயில் நிலையத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த பெண் மனித வெடிகுண்டு நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கு உதவி செய்ததாகவும், அவர்களுடன் சேர்ந்து தாக்குதலுக்கு கூட்டு சதியில் ஈடுபட்டதாகவும் கூறி பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், கனகசபை தேவதாசன் என்கிற நாதன் என்பவர் மீது கொழும்பு ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது தீர்ப்பு வழங்கிய நீதிபதி பியசேனா ரனசிங்கே, “குற்றம் சாட்டப்பட்டவர் மீது அவர் விடுதலைப்புலிகளுடன் இணைந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டு இருப்பது அரசு தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே நாதனுக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X