என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உள்ளாட்சித் தேர்தலை யாராலும் தடுக்க முடியாது: நேபாள பிரதமர் பிரசண்டா பேட்டி
Byமாலை மலர்29 March 2017 2:01 PM GMT (Updated: 29 March 2017 2:01 PM GMT)
நேபாளத்தில் மே 14-ம் தேதி திட்டமிட்டபடி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்றும், அதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் பிரதமர் பிரசண்டா தெரிவித்துள்ளார்.
காத்மாண்டு:
நேபாளத்தில் வரும் மே 14-ம் தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாதேசி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாகாண எல்லை தொடர்பான மறு வரையறை உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக புதிய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்தபிறகே தேர்தலை நடத்த வேண்டும் என கூறி வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு வார காலம் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய நேபாள பிரதமர் பிரசண்டா, காத்மாண்டு விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ‘மே 14-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும். இதற்கான சாதகமான சூழ்நிலையை அரசு உருவாக்கி வருகிறது. மாதேசி முன்னணியின் கோரிக்கைகள் அடுத்த பாராளுமன்றத் தேர்தலின்போது நிறைவேற்றப்படும். எனவே, இந்த தேர்தலை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. மாதேசி கட்சிகள் இந்த தேர்தலில் பங்கேற்கும் என நம்புகிறேன். எனவே, தேர்தலைப் பற்றி எந்த சந்தேகமும் வேண்டாம்’ என்றார்.
நேபாளம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இந்தியா ஆதரவு அளித்துள்ளது. சீன அரசாங்கம் ஒரு மில்லியன் டாலர் கொடுப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தில் வரும் மே 14-ம் தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாதேசி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாகாண எல்லை தொடர்பான மறு வரையறை உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக புதிய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்தபிறகே தேர்தலை நடத்த வேண்டும் என கூறி வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு வார காலம் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய நேபாள பிரதமர் பிரசண்டா, காத்மாண்டு விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ‘மே 14-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும். இதற்கான சாதகமான சூழ்நிலையை அரசு உருவாக்கி வருகிறது. மாதேசி முன்னணியின் கோரிக்கைகள் அடுத்த பாராளுமன்றத் தேர்தலின்போது நிறைவேற்றப்படும். எனவே, இந்த தேர்தலை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. மாதேசி கட்சிகள் இந்த தேர்தலில் பங்கேற்கும் என நம்புகிறேன். எனவே, தேர்தலைப் பற்றி எந்த சந்தேகமும் வேண்டாம்’ என்றார்.
நேபாளம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இந்தியா ஆதரவு அளித்துள்ளது. சீன அரசாங்கம் ஒரு மில்லியன் டாலர் கொடுப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X