என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டொனால்ட் டிரம்ப்புடன் எகிப்து அதிபர் பட்டா அல் சிசி ஏப்ரல் 3-ம் தேதி சந்திப்பு
Byமாலை மலர்29 March 2017 7:41 AM GMT (Updated: 29 March 2017 7:41 AM GMT)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பேசுவதற்காக எகிப்து அதிபர் ஃபட்டா அல் சிசி வாஷிங்டன் நகருக்கு வரும் ஏப்ரல் மூன்றாம் தேதி வரவுள்ளதாக வெள்ளை மாளிகை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று பொறுப்பேற்று கொண்ட டொனால்ட் டிரம்ப்பை பல நாட்டு தலைவர்கள் வரிசையாக சந்தித்து வருகின்றனர். அவ்வகையில், வரும் ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி எகிப்து அதிபர் ஃபட்டா அல் சிசி - டொனால்ட் டிரம்ப் ஆகியோர் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை இன்று உறுதிபடுத்தியுள்ளது.
எகிப்து நாட்டின் முன்னாள் அதிபராக இருந்த முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் முஹம்மது முர்சி கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். அதன் பின்னர் எகிப்து அதிபராக பொறுப்பேற்று கொண்ட ஃபட்டா அல் சிசிக்கும் அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பராக் ஒபாமாவுக்கும் இடையில் சமீபகாலமாக மோதல் போக்கு நிலவி வந்தது.
இந்நிலையில், ஒபாமாவின் கொள்கைகளுக்கு மாற்றான பாதையில் அமெரிக்க அரசை வழிநடத்திவரும் டொனால்ட் டிரம்ப் - ஃபட்டா அல் சிசி இடையே அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வளைகுடா பகுதியில் வேரூன்ற தொடங்கியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்து அந்த பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் தீவிர ஆலோசனை நடத்துவார்கள் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று பொறுப்பேற்று கொண்ட டொனால்ட் டிரம்ப்பை பல நாட்டு தலைவர்கள் வரிசையாக சந்தித்து வருகின்றனர். அவ்வகையில், வரும் ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி எகிப்து அதிபர் ஃபட்டா அல் சிசி - டொனால்ட் டிரம்ப் ஆகியோர் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை இன்று உறுதிபடுத்தியுள்ளது.
எகிப்து நாட்டின் முன்னாள் அதிபராக இருந்த முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் முஹம்மது முர்சி கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். அதன் பின்னர் எகிப்து அதிபராக பொறுப்பேற்று கொண்ட ஃபட்டா அல் சிசிக்கும் அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பராக் ஒபாமாவுக்கும் இடையில் சமீபகாலமாக மோதல் போக்கு நிலவி வந்தது.
இந்நிலையில், ஒபாமாவின் கொள்கைகளுக்கு மாற்றான பாதையில் அமெரிக்க அரசை வழிநடத்திவரும் டொனால்ட் டிரம்ப் - ஃபட்டா அல் சிசி இடையே அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வளைகுடா பகுதியில் வேரூன்ற தொடங்கியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்து அந்த பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் தீவிர ஆலோசனை நடத்துவார்கள் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X