என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலியாவில் 270 கி.மீ வேகத்தில் வீசிய புயல்
Byமாலை மலர்29 March 2017 7:29 AM GMT (Updated: 29 March 2017 8:20 AM GMT)
ஆஸ்திரேலியாவில் 270 கி.மீட்டர் வேகத்தில் டெப்பி புயல் வீசியதில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. இதனால் அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் பசிபிக் கடலில் ‘டெப்பி’ என பெயரிடப்பட்ட கடும் புயல் உருவானது. அப்புயல் நேற்று முன்தினம் குவின்ஸ்லாந்தில் போவன்- ஏர்லி கடற்கரை இடையே கரையை கடந்தது.
இதனால் மணிக்கு 273 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டியது. ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கடுமையான சூறாவளி வீசியதால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்தன. பெரும்பாலான வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. மின் கம்பங்கள் சரிந்தன. இதனால் குவின்ஸ்லாந்தில் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின. தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. மரங்கள் வேரோடு சாய்ந்தன.
குவின்ஸ்லாந்தின் பிரசித்தி பெற்ற கிரேட் பாரியார் கப் தீவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இது ஒரு சுற்றுலா தளமாகும். இங்கு தங்கியிருந்த வெளிநாட்டினர் கடும் அவதிக்குள்ளாகினர்.
பவுன்ஸ் வில்லே மாக்கே ஆகிய விமான, நிலையங்கள் மூடப்பட்டன. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியாவில் பசிபிக் கடலில் ‘டெப்பி’ என பெயரிடப்பட்ட கடும் புயல் உருவானது. அப்புயல் நேற்று முன்தினம் குவின்ஸ்லாந்தில் போவன்- ஏர்லி கடற்கரை இடையே கரையை கடந்தது.
இதனால் மணிக்கு 273 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டியது. ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கடுமையான சூறாவளி வீசியதால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்தன. பெரும்பாலான வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. மின் கம்பங்கள் சரிந்தன. இதனால் குவின்ஸ்லாந்தில் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின. தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. மரங்கள் வேரோடு சாய்ந்தன.
குவின்ஸ்லாந்தின் பிரசித்தி பெற்ற கிரேட் பாரியார் கப் தீவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இது ஒரு சுற்றுலா தளமாகும். இங்கு தங்கியிருந்த வெளிநாட்டினர் கடும் அவதிக்குள்ளாகினர்.
பவுன்ஸ் வில்லே மாக்கே ஆகிய விமான, நிலையங்கள் மூடப்பட்டன. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X