என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரு நாட்டில் தரையிறங்கும் போது தீப்பிடித்த போயிங் விமானம் - பயணிகள் அலறல்
Byமாலை மலர்29 March 2017 5:14 AM GMT (Updated: 29 March 2017 5:14 AM GMT)
பெரு நாட்டில் பயணிகள் விமானமானது தரையிறங்கும் போது இறக்கைகளில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
லிமா:
பெரு நாட்டில் ஜாவுஜா நகரில் இருக்கும் அண்டீன் விமான நிலையத்திற்கு நேற்று மாலை உள்ளுர் நேரப்படி 4.30 மணிக்கு தலைநகர் லிமாவில் இருந்து 141 பயணிகளை சுமந்து கொண்டு வந்த போயிங் ரக விமானம், விமான நிலைய ஓடுபாதையில் தறையிறங்க வானில் இருந்து கீழ் நோக்கி வந்தது. ஆனால், தறையிறங்க முயற்சிடும் போது திடீரென ஏற்பட்ட கோளாறு காணமாக ஓடுபாதையின் வலது புறத்தை நோக்கி விமானம் தாறுமாறாக சென்றது.
விமானத்தை ஓடுபாதையில் நிறுத்த முடியாமல் பைலட் திணறிய நேரத்தில், விமானத்தில் இருந்த பயணிகள் பயந்து கூச்சலிட்டனர். இதையடுத்து, திடீரென விமானத்தின் இறக்கைகளில் இருந்து கரும்புகை வெளி வந்து, சிறிது நேரத்திற்கு பின்னர் புகை தீயாக மாறி மளமளவென்று எரியத் தொடங்கியது. பின்னர், தானியங்கி தொழில்நுட்பம் மூலம் விமானம் கட்டுப்படுத்தப்பட்டு ஓடுபாதையில் இருந்து விலகிச்சென்ற நிலையில் நிறுத்தப்பட்டது.
விமானநிலையத்தில் இருந்த தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ உடனடியாக அனைக்கப்பட்டது. மேலும், பயணிகள் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் தீப்பிடித்தது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெரு நாட்டில் ஜாவுஜா நகரில் இருக்கும் அண்டீன் விமான நிலையத்திற்கு நேற்று மாலை உள்ளுர் நேரப்படி 4.30 மணிக்கு தலைநகர் லிமாவில் இருந்து 141 பயணிகளை சுமந்து கொண்டு வந்த போயிங் ரக விமானம், விமான நிலைய ஓடுபாதையில் தறையிறங்க வானில் இருந்து கீழ் நோக்கி வந்தது. ஆனால், தறையிறங்க முயற்சிடும் போது திடீரென ஏற்பட்ட கோளாறு காணமாக ஓடுபாதையின் வலது புறத்தை நோக்கி விமானம் தாறுமாறாக சென்றது.
விமானத்தை ஓடுபாதையில் நிறுத்த முடியாமல் பைலட் திணறிய நேரத்தில், விமானத்தில் இருந்த பயணிகள் பயந்து கூச்சலிட்டனர். இதையடுத்து, திடீரென விமானத்தின் இறக்கைகளில் இருந்து கரும்புகை வெளி வந்து, சிறிது நேரத்திற்கு பின்னர் புகை தீயாக மாறி மளமளவென்று எரியத் தொடங்கியது. பின்னர், தானியங்கி தொழில்நுட்பம் மூலம் விமானம் கட்டுப்படுத்தப்பட்டு ஓடுபாதையில் இருந்து விலகிச்சென்ற நிலையில் நிறுத்தப்பட்டது.
விமானநிலையத்தில் இருந்த தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ உடனடியாக அனைக்கப்பட்டது. மேலும், பயணிகள் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் தீப்பிடித்தது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X