search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பத்திரிகை புகைப்பட கலைஞர் கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை: வங்காளதேச கோர்ட்டு தீர்ப்பு
    X

    பத்திரிகை புகைப்பட கலைஞர் கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை: வங்காளதேச கோர்ட்டு தீர்ப்பு

    பத்திரிகை புகைப்பட கலைஞர் அப்தாப் அகமது படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து வங்காளதேச கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
    டாக்கா:

    வங்காளதேசத்தில் முன்னணி நாளிதழ் ஒன்றில் தலைமை புகைப்பட கலைஞராக நீண்ட காலம் பணியாற்றியவர், அப்தாப் அகமது (வயது 79).

    இவர் டாக்கா ராம்புரா வாப்தா சாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து கடந்த 2013-ம் ஆண்டு, டிசம்பர் 25-ந் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

    பணத்துக்காக இந்த படுகொலை நடந்தது. இந்த கொலையில், 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களில் 2 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கின் விசாரணை, டாக்கா விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது.

    விசாரணை முடிவில், ஹூமாயுன் கபீர், பிலால் உசேன், ஹபிப் ஹவ்லதார், ராஜூ முன்ஷி, ரசல் ஆகிய 5 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி அப்துர் ரகுமான்சர்தார் நேற்று தீர்ப்பு அளித்தார். மரண தண்டனை விதிக்கப்பட்ட ஹூமாயுன் கபீர், படுகொலை செய்யப்பட்ட அப்தாப் அகமதுவின் கார் டிரைவராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அப்தாப் அகமது, 1971-ம் ஆண்டு நடந்த வங்காளதேச சுதந்திரப்போராட்ட காட்சிகளை படம் பிடித்தவர், ‘எகுஷே பதக்’ விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×