என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடலோரப் பகுதியை தாக்கிய ‘டெப்பி’ புயல்
Byமாலை மலர்28 March 2017 7:04 PM GMT (Updated: 28 March 2017 7:04 PM GMT)
ஆஸ்திரேலிய நாட்டின் கிழக்கு கடலோரப் பகுதியை ‘டெப்பி’ என்ற புயல் நேற்று தாக்கியது. கடற்கரை பகுதியில் மணிக்கு 263 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி வீசியது.
சிட்னி:
ஆஸ்திரேலிய நாட்டின் கிழக்கு கடலோரப் பகுதியை ‘டெப்பி’ என்ற புயல் நேற்று தாக்கியது. குயின்ஸ்லாந்து பகுதியில் அமைந்துள்ள பவன், ஏர்லி கடற்கரை பகுதியில் மணிக்கு 263 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி வீசியது. 3-வது பிரிவு புயலாக வகைப்படுத்தப்பட்ட இந்த புயல் காரணமாக அங்கு இடைவிடாது, பேய் மழை பெய்தது.
ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 23 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின. வீடுகள் இடிந்து விழுந்ததில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். வீடுகளை விட்டு மக்கள் வெளியேற வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
2011-ம் ஆண்டுக்கு பிறகு இந்த புயல்தான் மிகுந்த சேதத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பில் குயின்ஸ்லாந்தில் 25 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். பலத்த வேகத்துடன் சூறாவளி வீசியபோது, இடது புறத்தில் இருந்தும், வலது புறத்தில் இருந்தும் மாறிமாறி சரக்கு ரெயில்கள் அதிவேகத்தில் சென்றது போல இருந்தது என சுற்றுலா தலமான விட்சண்டே தீவை சேர்ந்த ஒருவர் கூறினார். இந்த புயலின் தாக்கம் குறித்து பிரதமர் மால்கம் டர்ன்புல், பாராளுமன்றத்தில் பேசுகிறபோது பேரிடர் மீட்பு திட்டத்தை முடுக்கி விட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய நாட்டின் கிழக்கு கடலோரப் பகுதியை ‘டெப்பி’ என்ற புயல் நேற்று தாக்கியது. குயின்ஸ்லாந்து பகுதியில் அமைந்துள்ள பவன், ஏர்லி கடற்கரை பகுதியில் மணிக்கு 263 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி வீசியது. 3-வது பிரிவு புயலாக வகைப்படுத்தப்பட்ட இந்த புயல் காரணமாக அங்கு இடைவிடாது, பேய் மழை பெய்தது.
ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 23 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின. வீடுகள் இடிந்து விழுந்ததில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். வீடுகளை விட்டு மக்கள் வெளியேற வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
2011-ம் ஆண்டுக்கு பிறகு இந்த புயல்தான் மிகுந்த சேதத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பில் குயின்ஸ்லாந்தில் 25 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். பலத்த வேகத்துடன் சூறாவளி வீசியபோது, இடது புறத்தில் இருந்தும், வலது புறத்தில் இருந்தும் மாறிமாறி சரக்கு ரெயில்கள் அதிவேகத்தில் சென்றது போல இருந்தது என சுற்றுலா தலமான விட்சண்டே தீவை சேர்ந்த ஒருவர் கூறினார். இந்த புயலின் தாக்கம் குறித்து பிரதமர் மால்கம் டர்ன்புல், பாராளுமன்றத்தில் பேசுகிறபோது பேரிடர் மீட்பு திட்டத்தை முடுக்கி விட்டுள்ளதாக தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X