என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு சீல் வைப்பு: மர்ம பெட்டி கண்டெடுப்பால் பதற்றம்
Byமாலை மலர்28 March 2017 5:13 PM GMT (Updated: 28 March 2017 5:13 PM GMT)
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே சந்தேகத்திற்கு இடமான மர்ம பெட்டி கண்டெடுக்கப்பட்டது. இதனால் வெள்ளை மாளிகைக்கு சீல் வைக்கப்பட்டது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே உள்ள மைதானத்தில் சந்தேகத்திற்கு இடமான மர்ம பெட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
பின்னர் உடனடியாக வெள்ளை மாளிகைக்கு சீல் வைக்கப்பட்டது. இதனையடுத்து அமெரிக்கா ரகசிய போலீஸ் பிரிவினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதற்கு பொதுமக்கள் மற்றும் ஊடகங்களை சற்று தொலைவிற்கு அப்பால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதனிடையே மர்மமான பெட்டி அகற்றப்பட்டதோடு, இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். கலிபோர்னியாவை சேர்ந்த அவர் கையில் தண்டாயுதம் போன்ற ஒன்றை வைத்துக் கொண்டு அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவத்தின் போது அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபர் மிக்கி பென்ஸ் ஆகியோர் வெள்ளைமாளிகையின் உள்ளே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே உள்ள மைதானத்தில் சந்தேகத்திற்கு இடமான மர்ம பெட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
பின்னர் உடனடியாக வெள்ளை மாளிகைக்கு சீல் வைக்கப்பட்டது. இதனையடுத்து அமெரிக்கா ரகசிய போலீஸ் பிரிவினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதற்கு பொதுமக்கள் மற்றும் ஊடகங்களை சற்று தொலைவிற்கு அப்பால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதனிடையே மர்மமான பெட்டி அகற்றப்பட்டதோடு, இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். கலிபோர்னியாவை சேர்ந்த அவர் கையில் தண்டாயுதம் போன்ற ஒன்றை வைத்துக் கொண்டு அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவத்தின் போது அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபர் மிக்கி பென்ஸ் ஆகியோர் வெள்ளைமாளிகையின் உள்ளே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X