என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
101 வயதான அமெரிக்க கோடீசுவரர் ராக்பெல்லர் மரணம்
Byமாலை மலர்21 March 2017 4:41 AM GMT (Updated: 21 March 2017 4:41 AM GMT)
அமெரிக்காவின் பெரும்பணக்காரரும், கொடை வள்ளலுமான டேவிட் ராக்பெல்லர் நேற்று காலமானார். அவருக்கு வயது 101. இதய கோளாறு காரணமாக, நியூயார்க் நகரில் உள்ள அவரது வீட்டில், தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது.
நியூயார்க்:
அமெரிக்காவின் பெரும்பணக்காரரும், கொடை வள்ளலுமான டேவிட் ராக்பெல்லர் நேற்று காலமானார். அவருக்கு வயது 101. இதய கோளாறு காரணமாக, நியூயார்க் நகரில் உள்ள அவரது வீட்டில், தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது.
டேவிட் ராக்பெல்லர், மன்ஹட்டன் நகரில் ஜான் டி ராக்பெல்லர் ஜூனியரின் 6-வது மகனாக பிறந்தார். பிறகு, அவரது குடும்பம் நியூயார்க்குக்கு குடிபெயர்ந்தது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும், சிகாகோ பல்கலைக்கழகத்திலும் படித்துள்ளார். 1942-ம் ஆண்டு, அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்தார். ‘சேஸ் மன்ஹட்டன் கார்ப்’ நிறுவனத்தின் தலைவராக 12 ஆண்டுகள் பணியாற்றினார்.
தனது வாழ்நாளில் அவர் ரூ.13 ஆயிரத்து 600 கோடி தானமாக கொடுத்துள்ளார். அவரது தற்போதைய சொத்து மதிப்பு ரூ.22 ஆயிரத்து 220 கோடி ஆகும். கடந்த 2002-ம் ஆண்டு தனது சுயசரிதையை வெளியிட்டார். அவருக்கு 6 பிள்ளைகளும், 10 பேரக்குழந்தைகளும் உள்ளனர்.
அமெரிக்காவின் பெரும்பணக்காரரும், கொடை வள்ளலுமான டேவிட் ராக்பெல்லர் நேற்று காலமானார். அவருக்கு வயது 101. இதய கோளாறு காரணமாக, நியூயார்க் நகரில் உள்ள அவரது வீட்டில், தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது.
டேவிட் ராக்பெல்லர், மன்ஹட்டன் நகரில் ஜான் டி ராக்பெல்லர் ஜூனியரின் 6-வது மகனாக பிறந்தார். பிறகு, அவரது குடும்பம் நியூயார்க்குக்கு குடிபெயர்ந்தது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும், சிகாகோ பல்கலைக்கழகத்திலும் படித்துள்ளார். 1942-ம் ஆண்டு, அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்தார். ‘சேஸ் மன்ஹட்டன் கார்ப்’ நிறுவனத்தின் தலைவராக 12 ஆண்டுகள் பணியாற்றினார்.
தனது வாழ்நாளில் அவர் ரூ.13 ஆயிரத்து 600 கோடி தானமாக கொடுத்துள்ளார். அவரது தற்போதைய சொத்து மதிப்பு ரூ.22 ஆயிரத்து 220 கோடி ஆகும். கடந்த 2002-ம் ஆண்டு தனது சுயசரிதையை வெளியிட்டார். அவருக்கு 6 பிள்ளைகளும், 10 பேரக்குழந்தைகளும் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X