என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எச்1-பி விசாவைத் தொடர்ந்து எச்-4 விசாவுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க அமெரிக்கா திட்டம்?
Byமாலை மலர்9 March 2017 12:26 AM GMT (Updated: 9 March 2017 12:26 AM GMT)
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு பணிக்கு வருபவர்களுக்கு வழங்கப்படும் எச்1-பி விசாவைத் தொடர்ந்து,பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வழங்கும் எச்-4 விசாவுக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்பை தடை செய்யக் கோரி அமெரிக்க அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் வெளிநாட்டவர்கள் பணியாற்றுவதற்காக எச்1-பி விசா வழங்கப்படுகிறது. இவ்விசாவின் மூலம் வரும் பணியாளர்களின் மனைவி மற்றும் குழந்தைகள் அமெரிக்காவுக்குள் வருவதற்கு எச்-4 என்ற விசா வழங்கப்படுகிறது. எச்-4 விசாவின் மூலம் வருபர்களும் அமெரிக்காவில் வேறு பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் புதிய டிரம்ப் அரசால் விதிக்கப்பட்டுள்ள எச்1-பி விசா மீதான கட்டுப்பாடுகள் இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை வெகுவாக பாதித்துள்ள நிலையில், எச்-4 விசாவின் மூலம் அமெரிக்காவுக்கு வருபவர்களுக்கு வேலை வாய்ப்பை குறைக்க டிரம்ப் அரசு முடிவெடுத்துள்ளது.
அதன்படி, எச்-4 விசாவில் அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை 60 நாட்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் எனஅமெரிக்க நீதித்துறை சார்பில், வாஷிங்டன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் எச்- 4 விசாவில் அமெரிக்காவுக்கு செல்பவர்களுக்கு சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் வெளிநாட்டவர்கள் பணியாற்றுவதற்காக எச்1-பி விசா வழங்கப்படுகிறது. இவ்விசாவின் மூலம் வரும் பணியாளர்களின் மனைவி மற்றும் குழந்தைகள் அமெரிக்காவுக்குள் வருவதற்கு எச்-4 என்ற விசா வழங்கப்படுகிறது. எச்-4 விசாவின் மூலம் வருபர்களும் அமெரிக்காவில் வேறு பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் புதிய டிரம்ப் அரசால் விதிக்கப்பட்டுள்ள எச்1-பி விசா மீதான கட்டுப்பாடுகள் இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை வெகுவாக பாதித்துள்ள நிலையில், எச்-4 விசாவின் மூலம் அமெரிக்காவுக்கு வருபவர்களுக்கு வேலை வாய்ப்பை குறைக்க டிரம்ப் அரசு முடிவெடுத்துள்ளது.
அதன்படி, எச்-4 விசாவில் அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை 60 நாட்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் எனஅமெரிக்க நீதித்துறை சார்பில், வாஷிங்டன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் எச்- 4 விசாவில் அமெரிக்காவுக்கு செல்பவர்களுக்கு சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X