என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மியான்மரில் ராணுவம் - கிளர்ச்சியாளர்கள் மோதலால் கடந்த 3 மாதங்களில் 160 பேர் பலி
Byமாலை மலர்1 March 2017 1:18 PM GMT (Updated: 1 March 2017 1:18 PM GMT)
மியான்மர் நாட்டில் கடந்த 3 மாதங்களில் தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்தினருக்கு இடையேயான மோதலின் போது சுமார் 160 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
நேபிடா:
மியான்மர் நாட்டில் சீன எல்லையை ஒட்டிய ஷான் மாகானத்தில் 1980-ம் ஆண்டுகளில் இருந்து சிறு சிறு ஆயுதமேந்திய கிளர்ச்சிக் குழுக்கள் அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ஒடுக்குவதற்காக மியான்மர் ராணுவம் கடந்த சில ஆண்டுகளாக கடும் முயற்சி எடுத்து வருகின்றது.
ஆயுதக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காக அந்நாட்டின் தலைவர் ஆங்-சாங்-சூகி முயற்சி செய்தார். ஆனால், இப்பேச்சுவார்த்தை எடுபடாமல் போனது. மேலும், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ராணுவத்தினர் பலியான நிகழ்வும் நடந்துள்ளது.
கடந்த 3 மாதங்களில் மட்டும் 160 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்பகுதியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால் சுமார் 20000 பொதுமக்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், கிளர்ச்சிக் குழுக்கள் மீது வான்வெளித் தாக்குதல்களை மியான்மர் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக அண்டை நாடுகளின் உதவியை மியான்மர் அரசு கேட்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மியான்மர் நாட்டில் சீன எல்லையை ஒட்டிய ஷான் மாகானத்தில் 1980-ம் ஆண்டுகளில் இருந்து சிறு சிறு ஆயுதமேந்திய கிளர்ச்சிக் குழுக்கள் அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ஒடுக்குவதற்காக மியான்மர் ராணுவம் கடந்த சில ஆண்டுகளாக கடும் முயற்சி எடுத்து வருகின்றது.
ஆயுதக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காக அந்நாட்டின் தலைவர் ஆங்-சாங்-சூகி முயற்சி செய்தார். ஆனால், இப்பேச்சுவார்த்தை எடுபடாமல் போனது. மேலும், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ராணுவத்தினர் பலியான நிகழ்வும் நடந்துள்ளது.
கடந்த 3 மாதங்களில் மட்டும் 160 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்பகுதியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால் சுமார் 20000 பொதுமக்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், கிளர்ச்சிக் குழுக்கள் மீது வான்வெளித் தாக்குதல்களை மியான்மர் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக அண்டை நாடுகளின் உதவியை மியான்மர் அரசு கேட்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X