என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
'என்னுடன் விளையாடு' பணியாளரின் காலைக் கட்டிக்கொண்டு கெஞ்சும் பாண்டா: வைரல் வீடியோ
Byமாலை மலர்24 Feb 2017 8:35 AM GMT (Updated: 24 Feb 2017 8:49 AM GMT)
பணியாளரின் காலைக் கட்டிக்கொண்டு என்னுடன் விளையாடு என, பாண்டா கரடிக்குட்டி கெஞ்சும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பீஜிங்:
ஆறறிவு படைத்த மனிதனைப் போல ஐந்தறிவு கொண்ட விலங்குகளுக்கும் பாசமுண்டு என்பதை பல்வேறு நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன. அந்த வரிசையில் மற்றுமொரு நிகழ்வு தற்போது இணைந்துள்ளது.
சீனாவின் செங்டு பாண்டா இனப்பெருக்க ஆராய்ச்சி மையத்தில் பணியாளர் ஒருவர் வேலை செய்து கொண்டிருக்கிறார். அங்குள்ள பாண்டா கரடிக்குட்டி ஒன்று அவரை வேலை செய்ய விடாமல் என்னுடன் விளையாடு என அவரின் காலை கட்டிக்கொள்கிறது.
குழி தோண்டி மூங்கில்களை நட்டுக் கொண்டிருக்கும் பணியாளர் நேரமின்மையால், அந்தக் குட்டியை தூக்கி சற்று உயரத்தில் விட்டு தனது வேலையைத் தொடர்கிறார். ஆனால், மேலிருந்து கீழே இறங்கி வரும் கரடிக்குட்டி மீண்டும் அவரது காலை கட்டிக்கொள்கிறது.
இதுபோல மூன்று முறை உயரத்தில் விட்டும் கரடிக்குட்டி கீழிறங்கி வந்து அவரது காலை கட்டிக்கொள்கிறது. பார்ப்பவர்களின் மனதை உருகச்செய்யும் இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
வீடியோவைக் காண:
ஆறறிவு படைத்த மனிதனைப் போல ஐந்தறிவு கொண்ட விலங்குகளுக்கும் பாசமுண்டு என்பதை பல்வேறு நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன. அந்த வரிசையில் மற்றுமொரு நிகழ்வு தற்போது இணைந்துள்ளது.
சீனாவின் செங்டு பாண்டா இனப்பெருக்க ஆராய்ச்சி மையத்தில் பணியாளர் ஒருவர் வேலை செய்து கொண்டிருக்கிறார். அங்குள்ள பாண்டா கரடிக்குட்டி ஒன்று அவரை வேலை செய்ய விடாமல் என்னுடன் விளையாடு என அவரின் காலை கட்டிக்கொள்கிறது.
குழி தோண்டி மூங்கில்களை நட்டுக் கொண்டிருக்கும் பணியாளர் நேரமின்மையால், அந்தக் குட்டியை தூக்கி சற்று உயரத்தில் விட்டு தனது வேலையைத் தொடர்கிறார். ஆனால், மேலிருந்து கீழே இறங்கி வரும் கரடிக்குட்டி மீண்டும் அவரது காலை கட்டிக்கொள்கிறது.
இதுபோல மூன்று முறை உயரத்தில் விட்டும் கரடிக்குட்டி கீழிறங்கி வந்து அவரது காலை கட்டிக்கொள்கிறது. பார்ப்பவர்களின் மனதை உருகச்செய்யும் இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
வீடியோவைக் காண:
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X