என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 7 கோள்கள் - சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
Byமாலை மலர்23 Feb 2017 10:17 AM GMT (Updated: 23 Feb 2017 10:17 AM GMT)
சூரிய மண்டலத்திற்கு வெளியே பூமி அளவில் இருக்கும் ஏழு புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் நேற்று அறிவித்தனர். இதை கவுரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனமானது சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
வரலாற்றில் முதன் முறையாக நம்முடைய சூரிய மண்டலத்திற்கு வெளியே பூமி அளவில் இருக்கும் ஏழு கோள்களை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியில் இருந்து 39 ஒளியாண்டு தொலைவில் இருக்கும் இந்த கோள்களில் மனிதர்கள் வாழ சாத்தியம் என்றே தற்போது வரை கிடைத்திருக்கும் தகவல்களில் தெரியவந்துள்ளது.
ஆராய்ச்சியாளர்களின் இந்த கண்டுபிடிப்பை பாராட்டும் விதாமாகவும், புதிய கோள்கள் கண்டறியப்பட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாகவும் பிரபல தேடுபொறி தளமான கூகுள் நிறுவனமானது, சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. கூகுள் முகப்பு பக்கத்தை இந்த சிறப்பு டூடுல் அலங்கரித்துள்ளது.
அந்த சிறப்பு டூடுலை கிளிக் செய்தால் புதிதாக கண்டறியப்பட்ட கோள்களைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X