search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈராக்கில் ஐ.எஸ். இயக்கத்தினர் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் 3 பேர் பலி
    X

    ஈராக்கில் ஐ.எஸ். இயக்கத்தினர் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் 3 பேர் பலி

    ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வைத்திருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் அப்பாவி மக்கள் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
    பாக்தாத்:

    ஈராக் நாட்டில் கிர்குக் நகரில் சில பகுதிகளை 2014-ம் ஆண்டு முதல் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து உள்ளனர். அங்கு வசித்து வருகிற குடிமக்கள் அங்கிருந்து வெளியேறக்கூடாது என அவர்கள் தடை விதித்துள்ளனர்.

    அப்படி தப்பி ஓடுகிறவர்களையும் அவர்கள் கண்ணிவெடி தாக்குதல் நடத்தியும், துப்பாக்கிச்சூடும் நடத்தி கொன்று விடுகின்றனர். ஆனால் அதற்கு மத்தியிலும் அங்கு வசித்து வருகிற மக்கள், அவ்வப்போது அங்கிருந்து தப்பி ஓடுகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று கிர்குக் நகரின் ஹாவிஜா பகுதியில் இருந்து சிலர் தப்பி ஹாம்ரீன் மலைப்பகுதியை அடைந்தனர். ஆனால் அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் வைத்திருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்தபோது, அதில் அவர்கள் சிக்கிக்கொண்டனர். இதில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த சம்பவம் கிர்குக் பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    Next Story
    ×