என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிளினுக்குப் பதில் மெக்மாஸ்டர்: புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமித்தார் டிரம்ப்
Byமாலை மலர்21 Feb 2017 5:31 AM GMT (Updated: 21 Feb 2017 5:31 AM GMT)
அமெரிக்க அதிபர் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளின் ராஜினாமா செய்ததையடுத்து, அவருக்குப் பதில் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஹெர்பர்ட் ரேமண்ட் மெக்மாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்க 45-வது அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக்கேல் பிளினை நியமித்திருந்தார். அமெரிக்க பாதுகாப்புத்துறை புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவரான மைக்கேல், டொனால்டு டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர். இவர், இதற்கு முன்னர் தேசிய பாதுகாப்பு தொடர்பாக டிரம்ப்புக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வந்ததுடன், அவரது தேர்தல் பிரச்சார கூட்டங்களில் ஆரம்பநிலை பேச்சாளராக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்கா, ரஷ்யா மீது விதித்திருக்கும் தடைகளை அகற்றுவது குறித்து அமெரிக்க சட்டத்திற்கு எதிரான வகையில், ரஷ்ய தூதரோடு கலந்துரையாடியதாக பிளின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், மைக்கேல் பிளின் தனது பதவியை கடந்த சில தினங்களுக்கு முன் ராஜினாமா செய்தார். சுமார் மூன்று வாரங்கள் மட்டுமே அவர் பதவியில் நீடித்தார்.
பிளின் பதவி விலகியதையடுத்து, தற்காலிக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஜோசப் கெய்த் கெல்லாக் நியமிக்கப்பட்டு பணிகளை கவனித்து வந்தார்.
இந்நிலையில், டிரம்ப் தன்னுடைய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக, லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்பர்ட் ரேமண்ட் மெக்மாஸ்டரை நியமித்துள்ளார். தற்காலிக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்த கெய்த் கெல்லாக், மெக்மாஸ்டருக்கு அடுத்த நிலையில் பணியாற்ற உள்ளார். அவர், தேசிய பாதுகாப்பு கவுன்சில் பணியாளர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க 45-வது அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக்கேல் பிளினை நியமித்திருந்தார். அமெரிக்க பாதுகாப்புத்துறை புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவரான மைக்கேல், டொனால்டு டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர். இவர், இதற்கு முன்னர் தேசிய பாதுகாப்பு தொடர்பாக டிரம்ப்புக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வந்ததுடன், அவரது தேர்தல் பிரச்சார கூட்டங்களில் ஆரம்பநிலை பேச்சாளராக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்கா, ரஷ்யா மீது விதித்திருக்கும் தடைகளை அகற்றுவது குறித்து அமெரிக்க சட்டத்திற்கு எதிரான வகையில், ரஷ்ய தூதரோடு கலந்துரையாடியதாக பிளின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், மைக்கேல் பிளின் தனது பதவியை கடந்த சில தினங்களுக்கு முன் ராஜினாமா செய்தார். சுமார் மூன்று வாரங்கள் மட்டுமே அவர் பதவியில் நீடித்தார்.
பிளின் பதவி விலகியதையடுத்து, தற்காலிக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஜோசப் கெய்த் கெல்லாக் நியமிக்கப்பட்டு பணிகளை கவனித்து வந்தார்.
இந்நிலையில், டிரம்ப் தன்னுடைய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக, லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்பர்ட் ரேமண்ட் மெக்மாஸ்டரை நியமித்துள்ளார். தற்காலிக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்த கெய்த் கெல்லாக், மெக்மாஸ்டருக்கு அடுத்த நிலையில் பணியாற்ற உள்ளார். அவர், தேசிய பாதுகாப்பு கவுன்சில் பணியாளர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X