என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊடகங்கள் அமெரிக்க மக்களின் எதிரி: அதிபர் டிரம்ப் பாய்ச்சல்
Byமாலை மலர்18 Feb 2017 12:13 AM GMT (Updated: 18 Feb 2017 12:13 AM GMT)
ஊடகங்கள் அமெரிக்க மக்களின் எதிரி என்று அதிபர் டொனால்டு டிரம்ப் சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பும், பின்பும் டொனால்டு டிரம்ப் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், ஊடகங்கள் அமெரிக்க மக்களின் எதிரி என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது வாரவிடுமுறையை புளோரிடாவில் உள்ள மார்-ய-லகோ பகுதி இல்லத்திற்கு சென்ற சிறிது நேரத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுபோன்ற கருத்தினை பதிவிட்டுள்ளார்.
CNN, ABC, CBS போன்ற செய்தி நிறுவனங்களில் குறிப்பிட்டிருந்த டிரம்ப், போலியான செய்தி ஊடங்கங்கள் என்று சாடியிருந்தார்.
மேலும், மற்றொரு டுவிட்டர் பதவில், ”ஒரு நல்ல செய்தியாளர் சந்திப்பை இதுவரை பார்த்ததில்லை என்று ரஷ் லிம்பக் என்ற ஊடகவியலாளர் கூறி இருந்தார். இதனை பலரும் ஏற்றுக் கொள்கிறார்கள். போலி ஊடகங்கள் இதனை வித்தியாசமாக, நேர்மையற்ற முறையில் அணுகுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முந்தையை அமெரிக்க அதிபர்கள் பலரும் ஊடகங்களை விமர்சித்துள்ளனர். இருப்பினும் டிரம்பின் விமர்சன மொழி மிகவும் மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பும், பின்பும் டொனால்டு டிரம்ப் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், ஊடகங்கள் அமெரிக்க மக்களின் எதிரி என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது வாரவிடுமுறையை புளோரிடாவில் உள்ள மார்-ய-லகோ பகுதி இல்லத்திற்கு சென்ற சிறிது நேரத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுபோன்ற கருத்தினை பதிவிட்டுள்ளார்.
CNN, ABC, CBS போன்ற செய்தி நிறுவனங்களில் குறிப்பிட்டிருந்த டிரம்ப், போலியான செய்தி ஊடங்கங்கள் என்று சாடியிருந்தார்.
மேலும், மற்றொரு டுவிட்டர் பதவில், ”ஒரு நல்ல செய்தியாளர் சந்திப்பை இதுவரை பார்த்ததில்லை என்று ரஷ் லிம்பக் என்ற ஊடகவியலாளர் கூறி இருந்தார். இதனை பலரும் ஏற்றுக் கொள்கிறார்கள். போலி ஊடகங்கள் இதனை வித்தியாசமாக, நேர்மையற்ற முறையில் அணுகுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முந்தையை அமெரிக்க அதிபர்கள் பலரும் ஊடகங்களை விமர்சித்துள்ளனர். இருப்பினும் டிரம்பின் விமர்சன மொழி மிகவும் மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X