என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விசா நடைமுறையை எளிமையாக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்
Byமாலை மலர்17 Feb 2017 11:22 AM GMT (Updated: 17 Feb 2017 11:22 AM GMT)
தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் முஸ்லிம்களுக்கு விசா வழங்குவது தொடர்பான அதிபர் டிரம்ப்பின் உத்தரவுக்கு கோர்ட் தடை விதித்துள்ள நிலையில் விசா நடைமுறையை எளிமையாக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்போது முன்வந்துள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவுக்குள் நுழைய சிரியா அகதிகளுக்கு தடை, 7 முஸ்லிம் நாடுகளுக்கு விசா தடை, மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் திட்டம் உள்ளிட்ட அமெரிக்க குடியுரிமை மற்றும் வெளியுறவு கொள்கையில் புதிய அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவுகள் அமெரிக்க மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இவரது குடியுரிமை மற்றும் விசா கொள்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் டிரம்ப்பின் கொள்கை முடிவுகள் மீது அதிருப்தி தெரிவித்த வாஷிங்டன் நீதிமன்றம், அதிபரின் உத்தரவை செயல்படுத்த இடைக்கால தடையும் விதித்திருந்தது.
இந்நிலையில், வாஷிங்டன் நகரில் உள்ள அதிபரின் வெள்ளை மாளிகையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டொனால்ட் டிரம்ப், 'அரசின் குடியுரிமை மற்றும் விசா தொடர்பான முந்தைய உத்தரவை கோர்ட்டின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றியமைப்பது தொடர்பாக நாட்டின் தலைசிறந்த சட்ட நிபுணர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்' என தெரிவித்தார்.
முன்னதாக, கோர்ட்டின் தடை உத்தரவை வெகு மோசமான முடிவு, நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான முடிவு என டிரம்ப் விமர்சித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.
டிரம்ப்பின் இந்த திடீர் மனமாற்றம், எங்களுக்கு கிடைத்துள்ள முதல்கட்ட வெற்றி என்று வாஷிங்டன் மாநில அட்டார்னி ஜெனரல் பாப் பெர்குசன் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்குள் நுழைய சிரியா அகதிகளுக்கு தடை, 7 முஸ்லிம் நாடுகளுக்கு விசா தடை, மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் திட்டம் உள்ளிட்ட அமெரிக்க குடியுரிமை மற்றும் வெளியுறவு கொள்கையில் புதிய அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவுகள் அமெரிக்க மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இவரது குடியுரிமை மற்றும் விசா கொள்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் டிரம்ப்பின் கொள்கை முடிவுகள் மீது அதிருப்தி தெரிவித்த வாஷிங்டன் நீதிமன்றம், அதிபரின் உத்தரவை செயல்படுத்த இடைக்கால தடையும் விதித்திருந்தது.
இந்நிலையில், வாஷிங்டன் நகரில் உள்ள அதிபரின் வெள்ளை மாளிகையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டொனால்ட் டிரம்ப், 'அரசின் குடியுரிமை மற்றும் விசா தொடர்பான முந்தைய உத்தரவை கோர்ட்டின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றியமைப்பது தொடர்பாக நாட்டின் தலைசிறந்த சட்ட நிபுணர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்' என தெரிவித்தார்.
முன்னதாக, கோர்ட்டின் தடை உத்தரவை வெகு மோசமான முடிவு, நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான முடிவு என டிரம்ப் விமர்சித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.
டிரம்ப்பின் இந்த திடீர் மனமாற்றம், எங்களுக்கு கிடைத்துள்ள முதல்கட்ட வெற்றி என்று வாஷிங்டன் மாநில அட்டார்னி ஜெனரல் பாப் பெர்குசன் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X