என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை வருத்தமளிக்கிறது: கூகுளின் சுந்தர் பிச்சை வேதனை
Byமாலை மலர்28 Jan 2017 12:26 PM GMT (Updated: 28 Jan 2017 12:26 PM GMT)
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டுள்ள புதிய அறிக்கை தன்னை வேதனையில் ஆழ்த்தியிருப்பதாக கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
சான்பிரான்சிஸ்கோ:
ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய புதிய கட்டுப்பாடுகள் விதிக்கும் தீர்மானம் குறித்து கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை விமர்சித்துள்ளார். டொனால்ட் டிரம்ப்பின் புதிய தீர்மானம் 187 கூகுள் தொழிலாளர்களை பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
'இந்த தீர்மானம் எங்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இது கூகுள் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கும் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. மேலும் அமெரிக்காவிற்கு திறமைகளை கொண்டு வருவதிலும் இது கட்டுப்பாடுகளை ஏற்படுத்துகிறது', என சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளிக் கிழமையன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கையொப்பமிட்ட உத்தரவில் கிட்டத்தட்ட 90 நாட்களுக்கு ஈராக், ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமனில் இருந்து அமெரிக்கா வருபவர்களுக்கு விசா வழங்குவது 30 நாட்களுக்கு தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் கையெழுத்திட்ட இந்த உத்தரவு, இஸ்லாமிய தீவிரவாதிகள் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கவும், தங்கி இருக்கும் தீவிரவாதிகளை வெளியேற்றவும் அதிகாரம் அளிக்கும் வகையில் உள்ளது.
முன்னதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் தானும் இந்த அறிக்கையின் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். 'இந்த நாட்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும், ஆனால் இதற்கு யார் பிரச்சனையை ஏற்படுத்துகின்றார்களோ அவர்களை மட்டும் குறி வைக்க வேண்டும்', என மார்க் தனது ஃபேஸ்புக் போஸ்ட்டில் பதிவு செய்திருந்தார்.
ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய புதிய கட்டுப்பாடுகள் விதிக்கும் தீர்மானம் குறித்து கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை விமர்சித்துள்ளார். டொனால்ட் டிரம்ப்பின் புதிய தீர்மானம் 187 கூகுள் தொழிலாளர்களை பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
'இந்த தீர்மானம் எங்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இது கூகுள் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கும் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. மேலும் அமெரிக்காவிற்கு திறமைகளை கொண்டு வருவதிலும் இது கட்டுப்பாடுகளை ஏற்படுத்துகிறது', என சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளிக் கிழமையன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கையொப்பமிட்ட உத்தரவில் கிட்டத்தட்ட 90 நாட்களுக்கு ஈராக், ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமனில் இருந்து அமெரிக்கா வருபவர்களுக்கு விசா வழங்குவது 30 நாட்களுக்கு தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் கையெழுத்திட்ட இந்த உத்தரவு, இஸ்லாமிய தீவிரவாதிகள் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கவும், தங்கி இருக்கும் தீவிரவாதிகளை வெளியேற்றவும் அதிகாரம் அளிக்கும் வகையில் உள்ளது.
முன்னதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் தானும் இந்த அறிக்கையின் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். 'இந்த நாட்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும், ஆனால் இதற்கு யார் பிரச்சனையை ஏற்படுத்துகின்றார்களோ அவர்களை மட்டும் குறி வைக்க வேண்டும்', என மார்க் தனது ஃபேஸ்புக் போஸ்ட்டில் பதிவு செய்திருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X