என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவின் தென் மாநிலங்களை சூறையாடிய சூறாவளிக்கு 18 பேர் பலி
Byமாலை மலர்23 Jan 2017 11:27 AM GMT (Updated: 23 Jan 2017 11:27 AM GMT)
அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களை சூறையாடிய கடும் சூறாவளிக்கு இதுவரை 18 பேர் பலியாகினர். பலர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவிப் தெற்குப் பகுதியில் உள்ள ஜார்ஜியா, அலாபாமா, புளோரிடா மற்றும் மிஸிஸிப்பி ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், மேற்கண்ட மாநிலங்களின் பல பகுதிகளை நேற்று முழுவதும் சூறாவளி காற்றும் கடுமையாக தாக்கியது. சுழ்ற்றியடித்த சூறாவளிக் காற்றில் வீடு மற்றும் கடைகளின் மேற்கூரைகள் அடித்துச் செல்லப்பட்டதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி சூறாவளிக்கு 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை அறிவிப்பையடுத்து, வீடுகளை விட்டு வெளியேறிய மக்களுக்கு அரசு சார்பில் தற்காலிக முகாம்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், பாதிப்படைந்த இடங்களில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X