என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான்: மார்க்கெட் பகுதியில் இன்று குண்டு வெடிப்பில் சிக்கி 20 பேர் பலி
Byமாலை மலர்21 Jan 2017 8:32 AM GMT (Updated: 21 Jan 2017 8:32 AM GMT)
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள பிரபல மார்க்கெட் பகுதியில் இன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கிய 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் குர்ரம் பிரதேசத்தில் உள்ள பரச்சினார் நகரில் அமைந்துள்ள ஈத்கா மார்க்கெட் பகுதியில் இன்று அதிநவீன சக்திவாய்ந்த குண்டு வெடித்து சிதறியது.
இன்று காலை சுமார் 9 மணியளவில் அந்த மார்க்கெட்டில் இருந்த காய்கறி பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த குண்டு வெடித்த விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 50-க்கும் அதிகமானவர்கள் அருகாமையில் உள்ள பரச்சினார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாகிஸ்தான் உள்துறை மந்திரி சவுத்ரி நிசார் அலி கான் உத்தரவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் குர்ரம் பிரதேசத்தில் உள்ள பரச்சினார் நகரில் அமைந்துள்ள ஈத்கா மார்க்கெட் பகுதியில் இன்று அதிநவீன சக்திவாய்ந்த குண்டு வெடித்து சிதறியது.
இன்று காலை சுமார் 9 மணியளவில் அந்த மார்க்கெட்டில் இருந்த காய்கறி பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த குண்டு வெடித்த விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 50-க்கும் அதிகமானவர்கள் அருகாமையில் உள்ள பரச்சினார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாகிஸ்தான் உள்துறை மந்திரி சவுத்ரி நிசார் அலி கான் உத்தரவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X