என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நைஜீரியாவில் அகதிகள் முகாமில் ராணுவ விமானம் தவறுதலாக குண்டு வீச்சு: 100 பேர் பலி
Byமாலை மலர்17 Jan 2017 6:56 PM GMT (Updated: 17 Jan 2017 6:56 PM GMT)
நைஜீரியா நாட்டில் அகதிகள் முகாம் மீது ராணுவ ஜெட் விமானம் தவறுதலாக குண்டு வீசியதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அபுஜா:
நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த போகோ ஹாரம் தீவிரவாதிகளுக்கு எதிராக நைஜீரியா ராணுவம் பல்வேறு கட்ட பதில் தாக்குதல்களை நடத்துகின்றனர்.
இந்நிலையில், நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ரான் பகுதியில் அகதிகள் முகாம் மீது ராணுவ விமானப் படையை சேர்ந்த ஜெட் விமானம் தவறுதலாக குண்டு வீச்சை நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
தாக்குதலுக்கு ஆளானவர்களில் முகாமில் சேவை செய்து கொண்டிருந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவர் நல உதவியாளர்களும் அடங்குவர்.
ராணுவ கமாண்டர் மேஜர் ஜெனரல் லக்கி இரப்பார் இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளார். கேமரூனுக்கு எல்லைப் பகுதியில் சுமார் நூற்று ஐம்பது கிலோமீட்டர் தொலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து குண்டு வீச்சு தாக்குதலுக்கு ஆளான முகாம் பகுதியில் அரசு தரப்பினர் விரைந்து மீட்பு ஈடுபட்டனர். நைஜீரிய அரசு தரப்பில் நடந்துள்ள மிகப்பெரிய முதல் தவறுதல் இது என்று கருதப்படுகிறது.
நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த போகோ ஹாரம் தீவிரவாதிகளுக்கு எதிராக நைஜீரியா ராணுவம் பல்வேறு கட்ட பதில் தாக்குதல்களை நடத்துகின்றனர்.
இந்நிலையில், நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ரான் பகுதியில் அகதிகள் முகாம் மீது ராணுவ விமானப் படையை சேர்ந்த ஜெட் விமானம் தவறுதலாக குண்டு வீச்சை நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
தாக்குதலுக்கு ஆளானவர்களில் முகாமில் சேவை செய்து கொண்டிருந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவர் நல உதவியாளர்களும் அடங்குவர்.
ராணுவ கமாண்டர் மேஜர் ஜெனரல் லக்கி இரப்பார் இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளார். கேமரூனுக்கு எல்லைப் பகுதியில் சுமார் நூற்று ஐம்பது கிலோமீட்டர் தொலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து குண்டு வீச்சு தாக்குதலுக்கு ஆளான முகாம் பகுதியில் அரசு தரப்பினர் விரைந்து மீட்பு ஈடுபட்டனர். நைஜீரிய அரசு தரப்பில் நடந்துள்ள மிகப்பெரிய முதல் தவறுதல் இது என்று கருதப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X