என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென் சீனக் கடல் பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு: ஒபாமா நிர்வாகம் அழைப்பு
Byமாலை மலர்14 Jan 2017 12:28 AM GMT (Updated: 14 Jan 2017 12:28 AM GMT)
தென் சீனக் கடல் தொடர்பாக நிலவி வரும் பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு காண ஒபாமா அரசின் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
வாஷிங்டன்:
தென் சீனக் கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு பல்வேறு பகுதிகளில் மணல், கற்களை கொட்டி செயற்கை தீவுகளை, சீனா அமைத்து வருகிறது. மேலும் விமானப்படை தளம், கலங்கரை விளக்கம், கடற்படை தளம் போன்றவற்றை உருவாக்கி வருகிறது.
இதனால் பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஜப்பான், மலேசியா, தைவான், புருனே உள்ளிட்ட நாடுகளுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. பிலிப்பைன்ஸ், ஜப்பானுக்கு ஆதரவாக, அமெரிக்கா குரல் கொடுத்து வருகிறது.
இந்நிலையில், தென் சீனக் கடல் தொடர்பாக நிலவி வரும் பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு காண ஒபாமா அரசின் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
அதிபர் ஒபாமாவின் ஆட்சிக் காலம் இன்னும் சில தினங்களில் முடிவடைய உள்ளது. வருகிறது ஜனவரி 20-ம் தேதி புதிய அதிபர் பதவியேற்க உள்ளார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜோஷ் எர்னெஸ்ட் கூறுகையில், அச்சுறுத்தல் அல்லது வற்புறுத்தல் வழியில் இல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனைக்கான வழிகளை கண்டறிய வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்டார்.
முன்னதாக, சர்ச்சக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் ஆராய்ச்சி மையம் கட்டப்போவதாக சீனா புதிய அறிவிப்பு ஒன்றினை நேற்று வெளியிட்டது.
இது தொடர்பாக சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் சுத்தமான எரிசக்தியை உருவாக்கும் பொறுட்டு 5 ஆண்டு திட்டம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்து இருந்தது.
தென் சீனக் கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு பல்வேறு பகுதிகளில் மணல், கற்களை கொட்டி செயற்கை தீவுகளை, சீனா அமைத்து வருகிறது. மேலும் விமானப்படை தளம், கலங்கரை விளக்கம், கடற்படை தளம் போன்றவற்றை உருவாக்கி வருகிறது.
இதனால் பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஜப்பான், மலேசியா, தைவான், புருனே உள்ளிட்ட நாடுகளுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. பிலிப்பைன்ஸ், ஜப்பானுக்கு ஆதரவாக, அமெரிக்கா குரல் கொடுத்து வருகிறது.
இந்நிலையில், தென் சீனக் கடல் தொடர்பாக நிலவி வரும் பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு காண ஒபாமா அரசின் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
அதிபர் ஒபாமாவின் ஆட்சிக் காலம் இன்னும் சில தினங்களில் முடிவடைய உள்ளது. வருகிறது ஜனவரி 20-ம் தேதி புதிய அதிபர் பதவியேற்க உள்ளார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜோஷ் எர்னெஸ்ட் கூறுகையில், அச்சுறுத்தல் அல்லது வற்புறுத்தல் வழியில் இல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனைக்கான வழிகளை கண்டறிய வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்டார்.
முன்னதாக, சர்ச்சக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் ஆராய்ச்சி மையம் கட்டப்போவதாக சீனா புதிய அறிவிப்பு ஒன்றினை நேற்று வெளியிட்டது.
இது தொடர்பாக சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் சுத்தமான எரிசக்தியை உருவாக்கும் பொறுட்டு 5 ஆண்டு திட்டம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்து இருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X