என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இரசாயன தாக்குதலில் சிரிய அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு தொடர்பு
Byமாலை மலர்13 Jan 2017 11:52 PM GMT (Updated: 13 Jan 2017 11:52 PM GMT)
சிரியாவில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது இரசாயன தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு பொறுப்பு உண்டு என்று சர்வதேச விசாரணை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளது.
டமஸ்கஸ்:
சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது.
மிதவாத கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்காவும், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ரஷியாவும் ஆதரவு அளித்து வந்தன.இந்த சண்டையில் சுமார் 3 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். ஏறத்தாழ 7 லட்சம் பேர் இடம் பெயர்ந்தனர்.
இந்த நிலையில், சிரியாவில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது இரசாயன தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு அதிபர் பஷார் அல்-ஆசாத் மற்றும் அவரது சகோதரருக்கு பொறுப்பு உண்டு என்று சர்வதேச விசாரணை அமைப்புகள் முதன் முறையாக குற்றம்சாட்டியுள்ளது.
ராய்ட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் கூட்டு விசாரணை மற்றும் சர்வதேச இரசாயன ஆயுதங்கள் தடை அமைப்பின் கண்காணிப்பு மையம் ஏற்கனவே ராணுவ குழுக்களை மட்டும் கண்டறிந்து இருந்தது. ஆனால் எந்த கமாண்டோ மற்றும் அதிகாரியின் பெயரோ குறிப்பிடப்படவில்லை.
இருப்பினும் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது என்ற குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்று சிரிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது.
மிதவாத கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்காவும், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ரஷியாவும் ஆதரவு அளித்து வந்தன.இந்த சண்டையில் சுமார் 3 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். ஏறத்தாழ 7 லட்சம் பேர் இடம் பெயர்ந்தனர்.
இந்த நிலையில், சிரியாவில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது இரசாயன தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு அதிபர் பஷார் அல்-ஆசாத் மற்றும் அவரது சகோதரருக்கு பொறுப்பு உண்டு என்று சர்வதேச விசாரணை அமைப்புகள் முதன் முறையாக குற்றம்சாட்டியுள்ளது.
ராய்ட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் கூட்டு விசாரணை மற்றும் சர்வதேச இரசாயன ஆயுதங்கள் தடை அமைப்பின் கண்காணிப்பு மையம் ஏற்கனவே ராணுவ குழுக்களை மட்டும் கண்டறிந்து இருந்தது. ஆனால் எந்த கமாண்டோ மற்றும் அதிகாரியின் பெயரோ குறிப்பிடப்படவில்லை.
இருப்பினும் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது என்ற குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்று சிரிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X