என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பை மீறி மனநோயாளிக்கு தூக்கு தண்டனை
Byமாலை மலர்12 Jan 2017 7:44 AM GMT (Updated: 12 Jan 2017 7:44 AM GMT)
பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பை மீறி மனநோயாளிக்கு வரும் 17-ந்தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றலாம் என்று உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஹைசர் சையத் (வயது 55). இவர் 2003-ம் ஆண்டு தன்னுடன் வேலை பார்த்த அதிகாரி ஒருவரை சுட்டுக்கொன்றார்.
இதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டிலும் அவரது மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஜெயிலில் இருந்த அவருக்கு மனநோய் ஏற்பட்டது. சிஜிசோ பெர்னியா என்ற மனநோய் அவரை தாக்கி இருந்தது.
எனவே, அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் அவருக்கு மரண தண்டனை விதிக்க கூடாது என்று ஐ.நா. சபையும் எதிர்ப்பு தெரிவித்தது. பல்வேறு சமூக அமைப்புகளும் இதை எதிர்த்தன.
இந்த நிலையில் அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றலாமா? என்பது குறித்து ஜெயில் துறை சார்பில் உள்ளூர் கோர்ட்டில் கேட்கப்பட்டது. அதற்கு கோர்ட்டு அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றலாம் என அனுமதி அளித்துள்ளது.
வருகிற 17-ந்தேதி அவரை தூக்கில் போடும் படி நீதிபதி தனது உத்தரவில் கூறி இருக்கிறார். மனநோயாளியை தூக்கில் போடுவதால் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
பாகிஸ்தானை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஹைசர் சையத் (வயது 55). இவர் 2003-ம் ஆண்டு தன்னுடன் வேலை பார்த்த அதிகாரி ஒருவரை சுட்டுக்கொன்றார்.
இதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டிலும் அவரது மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஜெயிலில் இருந்த அவருக்கு மனநோய் ஏற்பட்டது. சிஜிசோ பெர்னியா என்ற மனநோய் அவரை தாக்கி இருந்தது.
எனவே, அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் அவருக்கு மரண தண்டனை விதிக்க கூடாது என்று ஐ.நா. சபையும் எதிர்ப்பு தெரிவித்தது. பல்வேறு சமூக அமைப்புகளும் இதை எதிர்த்தன.
இந்த நிலையில் அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றலாமா? என்பது குறித்து ஜெயில் துறை சார்பில் உள்ளூர் கோர்ட்டில் கேட்கப்பட்டது. அதற்கு கோர்ட்டு அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றலாம் என அனுமதி அளித்துள்ளது.
வருகிற 17-ந்தேதி அவரை தூக்கில் போடும் படி நீதிபதி தனது உத்தரவில் கூறி இருக்கிறார். மனநோயாளியை தூக்கில் போடுவதால் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X