என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊழல் குற்றச்சாட்டு விவகாரம்: கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் தர தென் கொரிய அதிபர் மறுப்பு
Byமாலை மலர்4 Jan 2017 12:35 AM GMT (Updated: 4 Jan 2017 12:35 AM GMT)
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் தர தென் கொரிய அதிபர் மறுப்பு தெரிவித்துள்ளார்
சியோல்:
தென்கொரிய அதிபர் பார்க் கியுன் ஹையிடம் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி அவரது நெருங்கிய தோழி சோய் சூன் சில், போலி தொண்டு நிறுவனங்களின் பெயரால் பல கோடி நிதி திரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதில் அதிபர் பார்க் கியுன் ஹைக்கு தொடர்பு உண்டு என கூறப்படுகிறது. அவரது பதவியை பறிக்க பாராளுமன்றத்தில் குற்ற தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர் இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து அவர் அந்த நாட்டின் அரசியல் சாசன சட்ட கோர்ட்டில் நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்திருக்க வேண்டும். ஆனால் அவர் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க மறுத்து விட்டார்.
இந்த ஊழலில் தொடர்புடையவர்களாக கருதப்படுகிற அவரது கூட்டாளிகள் நாளை (வியாழக்கிழமை), அரசியல் சாசன கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உள்ளனர். அப்போது அவரும் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதே நேரத்தில் அவரை வாக்குமூலம் அளிக்குமாறு கட்டாயப்படுத்த முடியாது என கோர்ட்டு கூறுகிறது. அவர் மீண்டும் கோர்ட்டுக்கு வர மறுத்து விட்டால், சட்டம் தனது கடமையை செய்யும் என கோர்ட்டு கூறி உள்ளது.
ஆனால் அவர் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் தர மாட்டார் என அவரது வக்கீல் லீ ஜங் ஹவான் கூறி உள்ளார்.
இந்த கோர்ட்டு விசாரணைதான், பார்க்கின் பதவியை நிரந்தரமாக பறிக்க வேண்டுமா அல்லது அவரை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டுமா என்பதை தீர்மானிக்கும். அவரது பதவி பறிக்கப்பட்டால் 60 நாளில் அதிபர் தேர்தல் நடத்தப்படும்.
தென்கொரிய அதிபர் பார்க் கியுன் ஹையிடம் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி அவரது நெருங்கிய தோழி சோய் சூன் சில், போலி தொண்டு நிறுவனங்களின் பெயரால் பல கோடி நிதி திரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதில் அதிபர் பார்க் கியுன் ஹைக்கு தொடர்பு உண்டு என கூறப்படுகிறது. அவரது பதவியை பறிக்க பாராளுமன்றத்தில் குற்ற தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர் இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து அவர் அந்த நாட்டின் அரசியல் சாசன சட்ட கோர்ட்டில் நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்திருக்க வேண்டும். ஆனால் அவர் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க மறுத்து விட்டார்.
இந்த ஊழலில் தொடர்புடையவர்களாக கருதப்படுகிற அவரது கூட்டாளிகள் நாளை (வியாழக்கிழமை), அரசியல் சாசன கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உள்ளனர். அப்போது அவரும் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதே நேரத்தில் அவரை வாக்குமூலம் அளிக்குமாறு கட்டாயப்படுத்த முடியாது என கோர்ட்டு கூறுகிறது. அவர் மீண்டும் கோர்ட்டுக்கு வர மறுத்து விட்டால், சட்டம் தனது கடமையை செய்யும் என கோர்ட்டு கூறி உள்ளது.
ஆனால் அவர் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் தர மாட்டார் என அவரது வக்கீல் லீ ஜங் ஹவான் கூறி உள்ளார்.
இந்த கோர்ட்டு விசாரணைதான், பார்க்கின் பதவியை நிரந்தரமாக பறிக்க வேண்டுமா அல்லது அவரை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டுமா என்பதை தீர்மானிக்கும். அவரது பதவி பறிக்கப்பட்டால் 60 நாளில் அதிபர் தேர்தல் நடத்தப்படும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X