என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2016-ன் செல்வாக்கான நபர் பட்டியல்: அமெரிக்க, ரஷிய அதிபர்களை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்த மோடி
Byமாலை மலர்5 Dec 2016 8:49 AM GMT (Updated: 5 Dec 2016 9:53 AM GMT)
2016-ம் ஆண்டின் செல்வாக்கான நபர்கள் பட்டியலில் அமெரிக்க, ரஷிய அதிபர்களை பின்னுக்குத்தள்ளி இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
நியூயார்க்:
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரசித்தி பெற்ற இதழான டைம் 2016-ம் ஆண்டுக்கான செல்வாக்கான நபரை தேர்ந்தெடுக்கும் வகையில் கருத்துக்கணிப்பொன்றை நடத்தியது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங், பிரிட்டன் அதிபர் தெரசா மே, வட கொரிய அதிபர் கிம் ஜங் உன், எப்.பி.ஐ தலைவர் ஜேம்ஸ் கமே, ஆப்பிள் சி.ஈ.ஓ டிம் குக் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் இந்த கருத்துக்கணிப்பு பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் 18% வாக்குகளுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். தற்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அசாஞ்சே ஆகியோர் 7% வாக்குகளுடன் இரண்டாமிடம் பிடித்துள்ளனர்.
பேஸ்புக்கின் மார்க் ஸூக்கர்பெர்க் 4% வாக்குகளையும், ஹிலாரி கிளிண்டன் 2% வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதன் இறுதி முடிவை டைம் இதழ் டிசம்பர் 7-ம் தேதி அறிவிக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதேபோல கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற கருத்துக்கணிப்பிலும் மோடி முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரசித்தி பெற்ற இதழான டைம் 2016-ம் ஆண்டுக்கான செல்வாக்கான நபரை தேர்ந்தெடுக்கும் வகையில் கருத்துக்கணிப்பொன்றை நடத்தியது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங், பிரிட்டன் அதிபர் தெரசா மே, வட கொரிய அதிபர் கிம் ஜங் உன், எப்.பி.ஐ தலைவர் ஜேம்ஸ் கமே, ஆப்பிள் சி.ஈ.ஓ டிம் குக் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் இந்த கருத்துக்கணிப்பு பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் 18% வாக்குகளுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். தற்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அசாஞ்சே ஆகியோர் 7% வாக்குகளுடன் இரண்டாமிடம் பிடித்துள்ளனர்.
பேஸ்புக்கின் மார்க் ஸூக்கர்பெர்க் 4% வாக்குகளையும், ஹிலாரி கிளிண்டன் 2% வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதன் இறுதி முடிவை டைம் இதழ் டிசம்பர் 7-ம் தேதி அறிவிக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதேபோல கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற கருத்துக்கணிப்பிலும் மோடி முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X