search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மீது இந்திய மாணவர் வழக்கு
    X

    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மீது இந்திய மாணவர் வழக்கு

    ஆசிரியர் சரியாக பாடம் நடத்தாததால் சலிப்படைந்த இந்திய மாணவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மீது வழக்கு தொடர்ந்தார்.
    லண்டன்:

    இங்கிலாந்து வாழ் இந்திய மாணவர் பயஸ்சித்திக். இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் பிராசனோஸ் கல்லூரியில் வரலாற்று பாடம் எடுத்து படித்தார்.

    இந்திய பேரரசர்கள் வரலாற்று பாடத்தை ஆசிரியர்கள் சரிவர நடத்தாமல் சலிப்படைய (போர்அடிக்க) வைத்தனர். எனவே அவர் குறைந்த மதிப்பெண் எடுத்து 2-வது வகுப்பில் தேர்ச்சி பெற்றார். இதனால் அவரால் வக்கீலுக்கு படித்து பணம் சம்பாதிக்க முடியவில்லை.

    எனவே ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மீது லண்டன் ஐகோர்ட்டில் பயஸ் சித்திக் வழக்கு தொடர்ந்தார். இச்சம்பவம் கடந்த 2000-ம் ஆண்டு நடந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்துவிட்டது. இந்த மாத இறுதிக்குள் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×