என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமர் மோடி போரை விரும்புபவர்: பாக். முன்னாள் அதிபர் முஷரப் சொல்கிறார்
Byமாலை மலர்3 Dec 2016 9:39 AM GMT (Updated: 3 Dec 2016 9:39 AM GMT)
இந்திய பிரதமர் நரேந்திர மோடி போரை விரும்புபவர் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் தெரிவித்துள்ளார்.
லாகூர்:
காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் புர்கான் வானியும், பாகிஸ்தானின் லஸ்கர்-இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ்சயீத் ஆகியோர் டெலிபோன் பேச்சை இந்திய உளவுத் துறையினர் வழிமறித்து டேப் செய்தனர். அதன் ஆடியோ சி.என்.என்.- நியூஸ் 18 என்ற டி.வி. சேனலில் வெளியானது.
அதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப், சி.என்.என்.-நியூஸ் 18 டெலிவிஷனுக்கு லாகூரில் இருந்து டெலிபோனில் கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது-
புர்கான் வானியும், ஹபீஸ் சயீத்தும் ஒருவரையொருவர் தொடர்பில் இருந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. ஹபீஸ் சயீத் படித்த மனிதர். ஒரு என்ஜினீயர். லஷ்கர்-இ- தொய்பா பாகிஸ்தானின் சிறந்த தொண்டு நிறுவனம்.
வெள்ளத்தின் போது அந்த அமைப்பு மக்களுக்காக சிறப்பாக பணியாற்றியது. புர்கான் வானியை பொறுத்தவரை இந்திய அரசின் கொள்கைகள் தான் அவரை ஆயுதங்கள் ஏந்த தூண்டியது. புர்கான் வானியின் குடும்பத்தினரை துன்புறுத்தி ஆயுதங்கள் ஏந்தி போரிட இந்திய ராணுவம் அவரை தூண்டியது.
ஹபீஸ் சயீத் ஒரு தீவிரவாதி என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. நான் ஒரு வக்கீல் ஆக இருந்தால் இந்த வழக்குக்கு எதிராக கோர்ட்டில் வாதாடி இருப்பேன். நான் ஒரு அதிபராக இருந்தால் அவரது வழக்கை எதிர்த்து ஐ.நா.வில் போராடி இருப்பேன்.
உலகில் பாகிஸ்தானை விட இந்தியாவுக்கு சிறந்த செல்வாக்கு உள்ளது. ஆனால் இந்திய அரசு பேச்சு வார்த்தைக்கு விரும்பாது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி போரை விரும்புபவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் புர்கான் வானியும், பாகிஸ்தானின் லஸ்கர்-இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ்சயீத் ஆகியோர் டெலிபோன் பேச்சை இந்திய உளவுத் துறையினர் வழிமறித்து டேப் செய்தனர். அதன் ஆடியோ சி.என்.என்.- நியூஸ் 18 என்ற டி.வி. சேனலில் வெளியானது.
அதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப், சி.என்.என்.-நியூஸ் 18 டெலிவிஷனுக்கு லாகூரில் இருந்து டெலிபோனில் கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது-
புர்கான் வானியும், ஹபீஸ் சயீத்தும் ஒருவரையொருவர் தொடர்பில் இருந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. ஹபீஸ் சயீத் படித்த மனிதர். ஒரு என்ஜினீயர். லஷ்கர்-இ- தொய்பா பாகிஸ்தானின் சிறந்த தொண்டு நிறுவனம்.
வெள்ளத்தின் போது அந்த அமைப்பு மக்களுக்காக சிறப்பாக பணியாற்றியது. புர்கான் வானியை பொறுத்தவரை இந்திய அரசின் கொள்கைகள் தான் அவரை ஆயுதங்கள் ஏந்த தூண்டியது. புர்கான் வானியின் குடும்பத்தினரை துன்புறுத்தி ஆயுதங்கள் ஏந்தி போரிட இந்திய ராணுவம் அவரை தூண்டியது.
ஹபீஸ் சயீத் ஒரு தீவிரவாதி என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. நான் ஒரு வக்கீல் ஆக இருந்தால் இந்த வழக்குக்கு எதிராக கோர்ட்டில் வாதாடி இருப்பேன். நான் ஒரு அதிபராக இருந்தால் அவரது வழக்கை எதிர்த்து ஐ.நா.வில் போராடி இருப்பேன்.
உலகில் பாகிஸ்தானை விட இந்தியாவுக்கு சிறந்த செல்வாக்கு உள்ளது. ஆனால் இந்திய அரசு பேச்சு வார்த்தைக்கு விரும்பாது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி போரை விரும்புபவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X