என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்: 5 குழந்தைகள் உட்பட 23 பேர் பலி
Byமாலை மலர்2 Dec 2016 10:44 PM GMT (Updated: 2 Dec 2016 10:44 PM GMT)
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 5 குழந்தைகள் உட்பட 23 பேர் கொல்லப்பட்டனர்.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை குறி வைத்து அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தலிபான்களுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டது. தலிபான்களும் அவ்வபோது பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 23 பேர் கொல்லப்பட்டனர். இதில் 5 குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் அடங்குவர்.
கந்தகர் மாவட்டத்தில் உள்ள நெஸ் சோதனை சாவடியில் தலிபான் பயங்கரவாதிகள் ஒருங்கிணைந்த தாக்குதலில் ஈடுபட்டனர்
முன்னதாக தெற்கு ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு போலீசார் நடத்திய தாக்குதலில் 29 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து அதிக அளவில் ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.
அதற்கு பழிவாங்கும் நடவடிக்கைக்காக இந்த பதில் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 23 பேரில் போலீசாரின் குடும்பத்தை சேர்ந்த 6 பேர் இருந்தனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை குறி வைத்து அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தலிபான்களுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டது. தலிபான்களும் அவ்வபோது பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 23 பேர் கொல்லப்பட்டனர். இதில் 5 குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் அடங்குவர்.
கந்தகர் மாவட்டத்தில் உள்ள நெஸ் சோதனை சாவடியில் தலிபான் பயங்கரவாதிகள் ஒருங்கிணைந்த தாக்குதலில் ஈடுபட்டனர்
முன்னதாக தெற்கு ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு போலீசார் நடத்திய தாக்குதலில் 29 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து அதிக அளவில் ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.
அதற்கு பழிவாங்கும் நடவடிக்கைக்காக இந்த பதில் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 23 பேரில் போலீசாரின் குடும்பத்தை சேர்ந்த 6 பேர் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X