என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.நா. சபையின் சார்பில் முதன்முறையாக மன்னிப்பு கேட்ட பான் கி மூன்
Byமாலை மலர்2 Dec 2016 8:47 AM GMT (Updated: 2 Dec 2016 8:47 AM GMT)
ஹைத்தி நாட்டில் பரவிய காலரா நோயை கட்டுப்படுத்த முடியாமல் போனதற்காக தனது பத்தாண்டு பதவிக்காலத்தில் ஐ.நா. பொதுசெயலாளர் பான் கி மூன் முதன்முறையாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
நியூயார்க்:
கரிபியன் கடற்பகுதியையொட்டி, வட அமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாட்டில் கடந்த 2010-ம் ஆண்டுவரை ‘காலரா’ எனப்படும் வாந்திபேதி நோயால் யாரும் பாதிக்கப்பட்டதில்லை. ஆனால், அதன்பிறகு அங்கு சென்ற ஐக்கியநாடுகள் அமைதிப்படையில் இடம்பெற்றிருந்த நேபாள நாட்டு ராணுவ வீரர்கள் தாங்கள் பயன்படுத்திய குப்பைக் கழிவுகளை ஹைத்தி நாட்டில் ஓடும் பிரதான ஆற்றில் வீசியதால் கடந்த 2011-ம் ஆண்டு இங்கு காலரா நோய் வெகுவாக பரவ ஆரம்பித்தது.
மிக குறுகிய காலத்தில் சுமார் 80 ஆயிரம் மக்களை காலரா நோய் தாக்கியது. ஐ.நா.சபையின் அமைதிப்படையின் நற்பெயருக்கும் நோக்கத்துக்கும் களங்கம் கற்பித்துவிட்ட இந்நோயை கட்டுப்படுத்த தவறிய வேளையிலும், இந்நோயின் தாக்கத்துக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக சுமார் 20 கோடி அமெரிக்க டாலர்களை தொகுப்பு நிதியாக திரட்ட ஐக்கிய நாடுகள் சபை முனைப்பு காட்டி வருகிறது.
இருப்பினும், உரிய நேரத்தில் இந்த நோயை கட்டுப்படுத்த தவறியமைக்காக ஐக்கிய நாடுகள் சபை வருத்தம் தெரிவிப்பதாகவும், ஹைத்தி மக்களிடம் இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான் கி மூன் நேற்று தெரிவித்துள்ளார்.
உலகின் தலைமை அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக கடந்த பத்தாண்டுகளாக பான் கி மூன் பதவி வகித்து வருகிறார். இந்த மாதத்துடன் அந்த பதவியில் இருந்து ஓய்வுபெறும் பான் கி மூன் இதுவரை எதற்காகவும் மன்னிப்பு கேட்டது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
கரிபியன் கடற்பகுதியையொட்டி, வட அமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாட்டில் கடந்த 2010-ம் ஆண்டுவரை ‘காலரா’ எனப்படும் வாந்திபேதி நோயால் யாரும் பாதிக்கப்பட்டதில்லை. ஆனால், அதன்பிறகு அங்கு சென்ற ஐக்கியநாடுகள் அமைதிப்படையில் இடம்பெற்றிருந்த நேபாள நாட்டு ராணுவ வீரர்கள் தாங்கள் பயன்படுத்திய குப்பைக் கழிவுகளை ஹைத்தி நாட்டில் ஓடும் பிரதான ஆற்றில் வீசியதால் கடந்த 2011-ம் ஆண்டு இங்கு காலரா நோய் வெகுவாக பரவ ஆரம்பித்தது.
மிக குறுகிய காலத்தில் சுமார் 80 ஆயிரம் மக்களை காலரா நோய் தாக்கியது. ஐ.நா.சபையின் அமைதிப்படையின் நற்பெயருக்கும் நோக்கத்துக்கும் களங்கம் கற்பித்துவிட்ட இந்நோயை கட்டுப்படுத்த தவறிய வேளையிலும், இந்நோயின் தாக்கத்துக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக சுமார் 20 கோடி அமெரிக்க டாலர்களை தொகுப்பு நிதியாக திரட்ட ஐக்கிய நாடுகள் சபை முனைப்பு காட்டி வருகிறது.
இருப்பினும், உரிய நேரத்தில் இந்த நோயை கட்டுப்படுத்த தவறியமைக்காக ஐக்கிய நாடுகள் சபை வருத்தம் தெரிவிப்பதாகவும், ஹைத்தி மக்களிடம் இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான் கி மூன் நேற்று தெரிவித்துள்ளார்.
உலகின் தலைமை அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக கடந்த பத்தாண்டுகளாக பான் கி மூன் பதவி வகித்து வருகிறார். இந்த மாதத்துடன் அந்த பதவியில் இருந்து ஓய்வுபெறும் பான் கி மூன் இதுவரை எதற்காகவும் மன்னிப்பு கேட்டது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X