என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மன்னர் 10-ம் ராமராக பதவி ஏற்க நாடு திரும்பிய தாய்லாந்து பட்டத்து இளவரசர்
Byமாலை மலர்1 Dec 2016 9:54 PM GMT (Updated: 1 Dec 2016 9:55 PM GMT)
ஜெர்மனி சென்றிருந்த தாய்லாந்து பட்டத்து இளவரசர் மகா வஜிரலோங்கோன் மன்னர் 10-ம் ராமராக பதவியேற்க நேற்று நாடு திரும்பினார்.
பாங்காக்:
தாய்லாந்து நாட்டில் 70 ஆண்டுகள் மன்னராக இருந்து வந்த பூமிபால் அதுல்யதேஜ், தனது 88-வது வயதில் கடந்த அக்டோபர் மாதம் 13-ந் தேதி மரணம் அடைந்தார்.
அதைத் தொடர்ந்து பட்டத்து இளவரசர் மகா வஜிரலோங்கோன் (63), நாட்டின் புதிய மன்னர் ஆவார் என தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் தாய்லாந்து பாராளுமன்றம், பட்டத்து இளவரசர் மகா வஜிரலோங்கோனை மன்னர் பதவி ஏற்க முறைப்படி அழைப்பு விடுத்தது.
அதைத் தொடர்ந்து, ஜெர்மனி சென்றிருந்த இளவரசர் மகா வஜிரலோங்கோன் நேற்று நாடு திரும்பினார். இதுபற்றி மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஜெர்மனி சென்றிருந்த பட்டத்து இளவரசர் பாங்காக் திரும்பி விட்டார் என்பதை உறுதி செய்கிறேன்” என்று கூறினார்.
மன்னர் பூமிபால் அதுல்யதேஜ், மரணம் அடைந்ததின் 50-வது நாள் சடங்கு, புத்த மத வழக்கப்படி நடக்கிறது. அதன்பின்னர் இளவரசர் மகா வஜிரலோங்கோன், பாராளுமன்ற அழைப்பை ஏற்றுக்கொண்டு அறிவிப்பு வெளியிடுவார்.
அதன்பின்னர் மன்னருக்கு முடிசூட்டும் விழா நடைபெறும். இளவரசர் மகா வஜிரலோங்கோன் மன்னர் ஆன பின்னர் மன்னர் 10-ம் ராமர் என அழைக்கப்படுவார்.
தாய்லாந்து நாட்டில் 70 ஆண்டுகள் மன்னராக இருந்து வந்த பூமிபால் அதுல்யதேஜ், தனது 88-வது வயதில் கடந்த அக்டோபர் மாதம் 13-ந் தேதி மரணம் அடைந்தார்.
அதைத் தொடர்ந்து பட்டத்து இளவரசர் மகா வஜிரலோங்கோன் (63), நாட்டின் புதிய மன்னர் ஆவார் என தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் தாய்லாந்து பாராளுமன்றம், பட்டத்து இளவரசர் மகா வஜிரலோங்கோனை மன்னர் பதவி ஏற்க முறைப்படி அழைப்பு விடுத்தது.
அதைத் தொடர்ந்து, ஜெர்மனி சென்றிருந்த இளவரசர் மகா வஜிரலோங்கோன் நேற்று நாடு திரும்பினார். இதுபற்றி மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஜெர்மனி சென்றிருந்த பட்டத்து இளவரசர் பாங்காக் திரும்பி விட்டார் என்பதை உறுதி செய்கிறேன்” என்று கூறினார்.
மன்னர் பூமிபால் அதுல்யதேஜ், மரணம் அடைந்ததின் 50-வது நாள் சடங்கு, புத்த மத வழக்கப்படி நடக்கிறது. அதன்பின்னர் இளவரசர் மகா வஜிரலோங்கோன், பாராளுமன்ற அழைப்பை ஏற்றுக்கொண்டு அறிவிப்பு வெளியிடுவார்.
அதன்பின்னர் மன்னருக்கு முடிசூட்டும் விழா நடைபெறும். இளவரசர் மகா வஜிரலோங்கோன் மன்னர் ஆன பின்னர் மன்னர் 10-ம் ராமர் என அழைக்கப்படுவார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X