என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரே ஒரு காலி பாட்டிலை வைத்து ரூ.32 லட்சம் சம்பாதித்த பலே கில்லாடி
Byமாலை மலர்23 Nov 2016 1:02 PM GMT (Updated: 23 Nov 2016 1:02 PM GMT)
காலி பாட்டிலொன்றை வைத்து ரூ.32 லட்சத்தை ஒருவர் சம்பாதித்த சம்பவம் ஜெர்மனி நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெர்லின்:
ஜெர்மனி நாட்டில் குளிர்பானத்தை குடித்து விட்டு காலி பாட்டிலை மறுசுழற்சிக்கான தானியங்கி இயந்திரத்தில் செலுத்தினால் அதற்கான பணமும் ரசீதும் கிடைக்கும்.
அதே நாட்டை சேர்ந்த 37 வயது குளிர்பான வியாபாரி ஒருவர் இந்த தொழில் நுட்ப இயந்திரத்தை சற்று மாற்றி அமைத்தார். அதன்படி மாற்றி அமைக்கப்பட்ட தானியங்கி இயந்திரத்தில் காலி பாட்டிலை செலுத்தினால் பாட்டிலுக்கான பணமும் ரசீதும் கிடைத்தது. ஆனால் காலி பாட்டில் இயந்திரத்தின் இன்னொரு வழியாக வந்து விழுந்தது.
அந்த ஒரே ஒரு காலி பாட்டிலை சுமார் 1,77,451 முறை அந்த தானியங்கி இயந்திரத்தில் செலுத்தி 32,35,831 ரூபாய் பணத்தை குளிர்பான வியாபாரி பெற்றிருக்கிறார்.
தானியங்கி மறுசுழற்சி செய்யும் எந்திரம் மிகவும் தாமதமாகத் தான் இந்த மோசடியைக் கண்டறிந்தது. குளிர்பான பாட்டில்கள் விற்பனையை விட மிக மிக அதிகமாக காலி பாட்டில்கள் செலுத்தப்பட்டிருப்பதைக் தெரிந்து கொண்ட நிறுவனம் அந்த வியாபாரி மீது வழக்குப் போட, தற்போது ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் அந்த கில்லாடி வியாபாரி.
ஜெர்மனி நாட்டில் குளிர்பானத்தை குடித்து விட்டு காலி பாட்டிலை மறுசுழற்சிக்கான தானியங்கி இயந்திரத்தில் செலுத்தினால் அதற்கான பணமும் ரசீதும் கிடைக்கும்.
அதே நாட்டை சேர்ந்த 37 வயது குளிர்பான வியாபாரி ஒருவர் இந்த தொழில் நுட்ப இயந்திரத்தை சற்று மாற்றி அமைத்தார். அதன்படி மாற்றி அமைக்கப்பட்ட தானியங்கி இயந்திரத்தில் காலி பாட்டிலை செலுத்தினால் பாட்டிலுக்கான பணமும் ரசீதும் கிடைத்தது. ஆனால் காலி பாட்டில் இயந்திரத்தின் இன்னொரு வழியாக வந்து விழுந்தது.
அந்த ஒரே ஒரு காலி பாட்டிலை சுமார் 1,77,451 முறை அந்த தானியங்கி இயந்திரத்தில் செலுத்தி 32,35,831 ரூபாய் பணத்தை குளிர்பான வியாபாரி பெற்றிருக்கிறார்.
தானியங்கி மறுசுழற்சி செய்யும் எந்திரம் மிகவும் தாமதமாகத் தான் இந்த மோசடியைக் கண்டறிந்தது. குளிர்பான பாட்டில்கள் விற்பனையை விட மிக மிக அதிகமாக காலி பாட்டில்கள் செலுத்தப்பட்டிருப்பதைக் தெரிந்து கொண்ட நிறுவனம் அந்த வியாபாரி மீது வழக்குப் போட, தற்போது ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் அந்த கில்லாடி வியாபாரி.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X