என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிரிய கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து ஐ.எஸ்-ன் ரகா நகரை துருக்கி ராணுவம் தாக்கும்: அதிபர் எர்டோகன்
Byமாலை மலர்27 Oct 2016 1:33 PM GMT (Updated: 27 Oct 2016 1:33 PM GMT)
சிரியாவில் உள்ள கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து ஐ.எஸ் தீவிரவாதிகளின் முக்கிய நகரான ரகாவை துருக்கி ராணுவம் தாக்கும் என்று அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
அங்காரா:
துருக்கி ராணுவம் சிரியாவின் வடக்கு பகுதியில் ஐ.எஸ் பிடியில் உள்ள முக்கியமான பகுதி ரகா நகரம் ஆகும். இந்த பகுதியில் ஐ.எஸ் எதிராக தாக்குதல் நடத்தி வரும் அரசு எதிர் தரப்பு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக சிரிய ராணுவம் செயல்படும் என்று அந்நாட்டு அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எர்டோகன் தெரிவித்துள்ளதாவது:
கிளர்ச்சியாளர்கள் தற்போது ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய நகரமான அல் பாப்பில் நெருங்கி வருகின்றனர். அந்த நகரை கைப்பற்றிய பிறகு அவர்கள் சிரிய குர்தீஸ் தீவிரவாதிகள் பிடித்துள்ள மன்பிஜ் பகுதியை குறி வைப்பார்கள். அதனை தொடர்ந்து சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் ரகாவை நோக்கி செல்வார்கள்.
சிரியாவில் எந்தவொரு தீவிரவாத அமைப்புகளும் தேவையில்லை. டேனிஷ்(ஐ.எஸ்) அமைப்பையும் ரகா நகரில் இருந்து வெளியேற்றுவோம். உங்களுடன் சேர்ந்த அதனை செய்வோம். எங்களுக்கு அந்த வலிமை உள்ளது.
இவ்வாறு கூறினார்.
ரகாவில் எப்படி தாக்குதல் நடத்துவது குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக விமான படையை அளிக்க விரும்புகிறது. ஆனால் துருக்கி சிரிய குர்தீஸ் தீவிரவாதிகளின் தலையீட்டை எதிர்க்கிறது.
துருக்கி ராணுவம் சிரியாவின் வடக்கு பகுதியில் ஐ.எஸ் பிடியில் உள்ள முக்கியமான பகுதி ரகா நகரம் ஆகும். இந்த பகுதியில் ஐ.எஸ் எதிராக தாக்குதல் நடத்தி வரும் அரசு எதிர் தரப்பு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக சிரிய ராணுவம் செயல்படும் என்று அந்நாட்டு அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எர்டோகன் தெரிவித்துள்ளதாவது:
கிளர்ச்சியாளர்கள் தற்போது ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய நகரமான அல் பாப்பில் நெருங்கி வருகின்றனர். அந்த நகரை கைப்பற்றிய பிறகு அவர்கள் சிரிய குர்தீஸ் தீவிரவாதிகள் பிடித்துள்ள மன்பிஜ் பகுதியை குறி வைப்பார்கள். அதனை தொடர்ந்து சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் ரகாவை நோக்கி செல்வார்கள்.
சிரியாவில் எந்தவொரு தீவிரவாத அமைப்புகளும் தேவையில்லை. டேனிஷ்(ஐ.எஸ்) அமைப்பையும் ரகா நகரில் இருந்து வெளியேற்றுவோம். உங்களுடன் சேர்ந்த அதனை செய்வோம். எங்களுக்கு அந்த வலிமை உள்ளது.
இவ்வாறு கூறினார்.
ரகாவில் எப்படி தாக்குதல் நடத்துவது குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக விமான படையை அளிக்க விரும்புகிறது. ஆனால் துருக்கி சிரிய குர்தீஸ் தீவிரவாதிகளின் தலையீட்டை எதிர்க்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X