search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லையில் இந்திய ராணுவம் தாக்குதல்: இந்திய தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்
    X

    எல்லையில் இந்திய ராணுவம் தாக்குதல்: இந்திய தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்

    எல்லையில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது தொடர்பாக 2வது நாளாக இந்திய தூதருக்கு பாகிஸ்தான் சம்மன் அளித்துள்ளது
    இஸ்லாமபாத்:

    பாகிஸ்தானில் இந்திய தூதர் ஜெ.பி.சிங்கிற்கு 2-வது நாளாக பாகிஸ்தான் அரசு சம்மன் அளித்துள்ளது.

    எல்லை பகுதிகளில் நேற்று முன்தினம் இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 2 பேர் உயிரிழந்ததாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இதனையொட்டி பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரை அழைத்து தனது கண்டனத்தை பாகிஸ்தான் பதிவு செய்தது.

    மேலும் இந்த சம்பவம் பற்றி முழுமையான விசாரணை நடத்தி அதன் அறிக்கையை பாகிஸ்தானுக்கு அளிக்கும்
    படியும், எல்லையில் அமைதி நிலவ ஒத்துழைக்குமாறும் இந்திய தூதரிடம் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்றும் இந்திய தூதர் ஜெ.பி.சிங்கிற்கு 2-வது நாளாக பாகிஸ்தான் அரசு சம்மன் அளித்துள்ளது. பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. 
    Next Story
    ×