என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்க தூதரின் அருணாச்சல பிரதேச வருகைக்கு சீனா கடும் எதிர்ப்பு
Byமாலை மலர்24 Oct 2016 12:30 PM GMT (Updated: 24 Oct 2016 12:30 PM GMT)
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமெரிக்க தூதர் கலந்து கொண்டதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பீஜிங்:
இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் ரிச்சர் வெர்மா கடந்த அக்டோபர் 22-ம் தேதி அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அருணாச்சல பிரதேச முதல்-மந்திரி பெமா காண்டு அழைப்பின் பேரில் அமெரிக்க தூதர் வெர்மா சர்ச்சைக்குரிய தவாங்க் பகுதிக்கு வருகை புரிந்தார்.
இது தொடர்பான தகவலை தனது டுவிட்டர் வலைதளத்தில் ரிச்சர்டு வெர்மா பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க தூதர் கலந்து கொண்டதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் லு கங் கூறுகையில், ’இந்தியா சீனா எல்லை விவகாரத்தில் அமெரிக்கா தலையீடு தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்தும், அமைதியை சீர்குலைக்கும். இந்த விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள சீனா விரும்புகிறது’ என்றார்.
முன்னதாக அருணாச்சல பிரதேச எல்லை விவகாரத்தில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நீண்ட காலமாக சிக்கல் நிலவி வருகிறது. அருணாச்சல் பிரதேச எல்லையில் சுமார் 90 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு தெற்கு திபெத்தை சேர்ந்தது என்று சீனா கூறி வருகிறது.
இதனால் அருணாச்சல பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய பகுதிக்கு இந்திய தலைவர்கள் வருகை புரியும் பொழுதெல்லாம் சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் ரிச்சர் வெர்மா கடந்த அக்டோபர் 22-ம் தேதி அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அருணாச்சல பிரதேச முதல்-மந்திரி பெமா காண்டு அழைப்பின் பேரில் அமெரிக்க தூதர் வெர்மா சர்ச்சைக்குரிய தவாங்க் பகுதிக்கு வருகை புரிந்தார்.
இது தொடர்பான தகவலை தனது டுவிட்டர் வலைதளத்தில் ரிச்சர்டு வெர்மா பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க தூதர் கலந்து கொண்டதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் லு கங் கூறுகையில், ’இந்தியா சீனா எல்லை விவகாரத்தில் அமெரிக்கா தலையீடு தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்தும், அமைதியை சீர்குலைக்கும். இந்த விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள சீனா விரும்புகிறது’ என்றார்.
முன்னதாக அருணாச்சல பிரதேச எல்லை விவகாரத்தில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நீண்ட காலமாக சிக்கல் நிலவி வருகிறது. அருணாச்சல் பிரதேச எல்லையில் சுமார் 90 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு தெற்கு திபெத்தை சேர்ந்தது என்று சீனா கூறி வருகிறது.
இதனால் அருணாச்சல பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய பகுதிக்கு இந்திய தலைவர்கள் வருகை புரியும் பொழுதெல்லாம் சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X