search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜப்பான்: பூங்கா அருகே இரு இடங்களில் மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி
    X

    ஜப்பான்: பூங்கா அருகே இரு இடங்களில் மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி

    ஜப்பான் நாட்டின் உட்சுனோமியா நகரில் உள்ள பூங்கா அருகே இன்று இரு இடங்களில் மர்மப்பொருள் வெடித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
    டோக்கியோ:

    ஜப்பானின் வடபகுதியான கன்ட்டோ மாகாணத்தின் உட்சுனோமியா நகரில் உள்ள பூங்கா அருகே இன்று நாட்டுப்புற கலைவிழா நடைபெற்றது. அப்போது, அங்கு இரு இடங்களில் அடுத்தடுத்து பலமுறை மர்மப்பொருள் வெடித்தது.

    இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். இருபெண்கள் உள்பட மூன்றுபேர் காயமடைந்தனர். அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு கார்கள் தீக்கிரையாகின.



    வெடித்த பொருள் எது? என்பது தெரியாத நிலையில் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்களும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
    Next Story
    ×