என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெற்றி பெற்றால் வெள்ளை மாளிகை - இல்லாவிட்டால் நீதிமன்றம்: டொனால்ட் டிரம்பின் ‘போங்காட்டம்’
Byமாலை மலர்21 Oct 2016 7:29 AM GMT (Updated: 21 Oct 2016 7:29 AM GMT)
‘மணந்தால் மகாதேவி - இல்லையென்றால், மரணதேவி’ பாணியில், அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகள் எனக்கு சாதகமாக அமைந்தால் ஏற்றுக் கொள்வேன், இல்லாவிட்டால் நியாயம்கேட்டு நீதிமன்றம் போவேன் என குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பிரபல ரியல் எஸ்டேட் மற்றும் ஊடக குழுமங்களின் அதிபரும் பெரும் செல்வந்தருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.
வாக்குப்பதிவுக்கு இன்னும் சுமார் 20 நாட்கள் மட்டுமே உள்ளநிலையில் டொனால்ட் டிரம்ப் - ஹிலாரி கிளிண்டன் இடையிலான வாக்குவாதங்களும் மோதல்களும் அதிகரித்து வருகிறது.
இதுவரை மூன்றுமுறை நேருக்குநேர் விவாத நிகழ்ச்சிகளில் இருவரும் காரசாரமாக மோதிக் கொண்டனர்.
இந்நிலையில், ஓஹியோ மாநிலத்தில் உள்ள டெலாவேர் நகரில் நேற்று தனது ஆதரவாளர்களிடையே பேசிய டொனால்ட் டிரம்ப், ‘இன்று உங்களுக்கு எல்லாம் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். வரலாற்று சிறப்புமிக்க இந்த தேர்தலில் நான் வெற்றிபெற்றால் ஏற்றுக் கொள்வேன்.
மாறாக, தேர்தல் முடிவுகள் கேள்விக்குரிய வகையில் அமைந்தால் அதை எதிர்த்து சட்டப்படி வழக்கு தொடர்வேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பிரபல ரியல் எஸ்டேட் மற்றும் ஊடக குழுமங்களின் அதிபரும் பெரும் செல்வந்தருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.
வாக்குப்பதிவுக்கு இன்னும் சுமார் 20 நாட்கள் மட்டுமே உள்ளநிலையில் டொனால்ட் டிரம்ப் - ஹிலாரி கிளிண்டன் இடையிலான வாக்குவாதங்களும் மோதல்களும் அதிகரித்து வருகிறது.
இதுவரை மூன்றுமுறை நேருக்குநேர் விவாத நிகழ்ச்சிகளில் இருவரும் காரசாரமாக மோதிக் கொண்டனர்.
இந்நிலையில், ஓஹியோ மாநிலத்தில் உள்ள டெலாவேர் நகரில் நேற்று தனது ஆதரவாளர்களிடையே பேசிய டொனால்ட் டிரம்ப், ‘இன்று உங்களுக்கு எல்லாம் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். வரலாற்று சிறப்புமிக்க இந்த தேர்தலில் நான் வெற்றிபெற்றால் ஏற்றுக் கொள்வேன்.
மாறாக, தேர்தல் முடிவுகள் கேள்விக்குரிய வகையில் அமைந்தால் அதை எதிர்த்து சட்டப்படி வழக்கு தொடர்வேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X