என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் உள்ள மோசூல் நகரை மீட்க உச்சகட்டப் போர் - 6 ஆயிரம் மக்கள் வெளியேறினர்
Byமாலை மலர்21 Oct 2016 7:23 AM GMT (Updated: 21 Oct 2016 7:23 AM GMT)
ஈராக் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் உள்ள மோசூல் நகரை மீட்க உச்சகட்டப் போர் நடைபெற்றுவரும் நிலையில் உயிர் பயத்துடன் அங்கிருந்து சுமார் 6 ஆயிரம் மக்கள் வெளியேறியுள்ளனர்.
பாக்தாத்:
ஈராக் நாட்டில் உள்ள முக்கிய பெருநகரமான மோசூலில் சுமார் 15 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்நகரை கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள், அப்பகுதி முழுவதையும் இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐ.எஸ். இயக்கத்தின் ஆட்சிக்கு உட்பட்டதாக அறிவித்தனர்.
ஈராக்கில் உள்ள மோசூல் நகரை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கிருந்தபடி தங்களது ஆதிக்கத்தை உலகம் முழுவதும் பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மோசூல் நகரை தீவிரவாதிகளின் தலைமையிடமாக மாற்றியுள்ள இவர்கள் இங்கிருந்தவாறு உலகம் முழுவதும் அப்பாவி மக்களை குறிவைத்து தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இவர்களை ஒழிக்க ஈராக் ராணுவப் படைகளுடன் அமெரிக்க விமானப்படையும் துணையாக தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து சுமார் 360 கிலோமீட்டர் வடமேற்கே உள்ள இந்நகரை தங்களது ஆதிக்கத்தில் வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்குள்ள மக்களை மோசூல் நகரைவிட்டு வெளியேற விடாமல் மிரட்டி, தடுத்து வைத்துள்ளனர். அரசுக்கு உளவு பார்ப்பதாக சந்தேகித்து பலரை கொன்றும் குவித்துள்ளனர்.
மோசூலை கைப்பற்ற அமெரிக்க கூட்டுப்படையினரின் துணையுடன் ஈராக் ராணுவம் எடுத்துவந்த பல்வேறுகட்ட நடவடிக்கைகள் பெரியளவிலான பலன் தரவில்லை. மோசூல் நகருக்கு செல்லும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டதால் அங்குள்ள மக்கள் பசி,பட்டினியாலும், கடும் நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மோசூல் நகரை ஆக்கிரமித்துள்ள ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது உச்சகட்ட தாக்குதல் நடத்தி, அந்நகரை உடனடியாக மீட்குமாறு ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாடி உத்தரவிட்டார்.
இதனையடுத்து, கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றுவரும் உச்சகட்ட தாக்குதலுக்கு இடையே சுமார் ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த சுமார் 6 ஆயிரம் பேர் போருக்கு அஞ்சி மோசூல் நகரைவிட்டு வெளியேறியுள்ளதாக ஜெனிவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்ந்தோருக்கான முகமை தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் நினேவே நகரையொட்டியுள்ள அல்-ஹூட் என்ற கிராமத்திலும், டெபாகா நகரிலும் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஈராக் நாட்டில் உள்ள முக்கிய பெருநகரமான மோசூலில் சுமார் 15 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்நகரை கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள், அப்பகுதி முழுவதையும் இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐ.எஸ். இயக்கத்தின் ஆட்சிக்கு உட்பட்டதாக அறிவித்தனர்.
ஈராக்கில் உள்ள மோசூல் நகரை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கிருந்தபடி தங்களது ஆதிக்கத்தை உலகம் முழுவதும் பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மோசூல் நகரை தீவிரவாதிகளின் தலைமையிடமாக மாற்றியுள்ள இவர்கள் இங்கிருந்தவாறு உலகம் முழுவதும் அப்பாவி மக்களை குறிவைத்து தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இவர்களை ஒழிக்க ஈராக் ராணுவப் படைகளுடன் அமெரிக்க விமானப்படையும் துணையாக தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து சுமார் 360 கிலோமீட்டர் வடமேற்கே உள்ள இந்நகரை தங்களது ஆதிக்கத்தில் வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்குள்ள மக்களை மோசூல் நகரைவிட்டு வெளியேற விடாமல் மிரட்டி, தடுத்து வைத்துள்ளனர். அரசுக்கு உளவு பார்ப்பதாக சந்தேகித்து பலரை கொன்றும் குவித்துள்ளனர்.
மோசூலை கைப்பற்ற அமெரிக்க கூட்டுப்படையினரின் துணையுடன் ஈராக் ராணுவம் எடுத்துவந்த பல்வேறுகட்ட நடவடிக்கைகள் பெரியளவிலான பலன் தரவில்லை. மோசூல் நகருக்கு செல்லும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டதால் அங்குள்ள மக்கள் பசி,பட்டினியாலும், கடும் நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மோசூல் நகரை ஆக்கிரமித்துள்ள ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது உச்சகட்ட தாக்குதல் நடத்தி, அந்நகரை உடனடியாக மீட்குமாறு ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாடி உத்தரவிட்டார்.
இதனையடுத்து, கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றுவரும் உச்சகட்ட தாக்குதலுக்கு இடையே சுமார் ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த சுமார் 6 ஆயிரம் பேர் போருக்கு அஞ்சி மோசூல் நகரைவிட்டு வெளியேறியுள்ளதாக ஜெனிவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்ந்தோருக்கான முகமை தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் நினேவே நகரையொட்டியுள்ள அல்-ஹூட் என்ற கிராமத்திலும், டெபாகா நகரிலும் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X