என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜப்பானை தாக்கிய நிலநடுக்கத்தால் பலர் காயம் - புல்லட் ரெயில் சேவை பாதிப்பு
Byமாலை மலர்21 Oct 2016 6:37 AM GMT (Updated: 21 Oct 2016 6:37 AM GMT)
ஜப்பான் நாட்டை இன்று தாக்கிய 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பலர் காயமடைந்ததாகவும், மின்சேவை பாதிப்பால் புல்லட் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
டோக்கியோ:
ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியை (இந்திய நேரப்படி) இன்று காலை சுமார் 10.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.
டோட்டோரி பகுதியை மையமாக கொண்டு பூமியின் அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 அலகுகளாக பதிவானது.
இன்றைய நிலநடுக்கத்தால் யுரிஹாமா நகரில் வீடு இடிந்து விழுந்ததாகவும், குரயோஷி நகரில் பலர் காயமடைந்ததாகவும் ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
நிலநடுக்கத்தின் அதிர்ச்சியால் இந்த நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள சுமார் 40 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் இவ்வழியாக செல்லும் புல்லட் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியை (இந்திய நேரப்படி) இன்று காலை சுமார் 10.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.
டோட்டோரி பகுதியை மையமாக கொண்டு பூமியின் அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 அலகுகளாக பதிவானது.
இன்றைய நிலநடுக்கத்தால் யுரிஹாமா நகரில் வீடு இடிந்து விழுந்ததாகவும், குரயோஷி நகரில் பலர் காயமடைந்ததாகவும் ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
நிலநடுக்கத்தின் அதிர்ச்சியால் இந்த நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள சுமார் 40 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் இவ்வழியாக செல்லும் புல்லட் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X