search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிபிஸ் மின்சார உற்பத்தி நிலையம், ஈராக்.
    X
    டிபிஸ் மின்சார உற்பத்தி நிலையம், ஈராக்.

    ஈராக்: மின் உற்பத்தி நிலையம் மீது தற்கொலைப்படை தாக்குதல் - 16 பேர் பலி

    ஈராக் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள மின்சார உற்பத்தி நிலையம் மீது இன்று தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் 16 பேர் உயிரிழந்தனர்.
    பாக்தாத்:

    ஈராக் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள டிபிஸ் நகரில் மின்சார உற்பத்தி நிலையம் ஒன்றை ஈரானை சேர்ந்த ஒரு நிறுவனம் அமைத்து வருகிறது. இன்று காலை சுமார் 8 மணியளவில் இந்த மின் உற்பத்தி நிலையத்துக்குள் 3 தீவிரவாதிகள் நுழைந்தனர்.

    தங்கள் உடல்களில் கட்டியிருந்த குண்டுகளை அவர்கள் வெடிக்க வைத்ததில் 16-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் டிபிஸ் நகர மேயர் அப்துல்லா நூருதீன் அல்-சலேஹி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×