search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி 17-ம் தேதி இந்தியா வருகை: 3 நாட்கள் சுற்றுப்பயணம்
    X

    மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி 17-ம் தேதி இந்தியா வருகை: 3 நாட்கள் சுற்றுப்பயணம்

    மியான்மர் அரசின் சிறப்பு ஆலோசகர் ஆங் சான் சூகி, வரும் 17-ம்தேதி முதல் மூன்று நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
    நேபிடா:

    மியான்மர் அரசின் சிறப்பு ஆலோசகரும் வெளியுறவுத்துறை மந்திரியுமான ஆங் சான் சூகி, மோடியின் அழைப்பை ஏற்று வரும் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஆங் சான் சூகியுடன் முக்கிய துறைகளின் மந்திரிகள், மூத்த அதிகாரிகளும் வருகின்றனர்.

    இந்த சுற்றுப்பயணத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார். மேலும் இரு தரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வழிகள் தொடர்பாக இந்திய தொழிலதிபர்களிடையே கலந்துரையாட உள்ளார்.

    ஆங் சான் சூகியின் இந்த பயணம், இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்த வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த மாதம் 14-வது இந்திய-ஆசியான் மாநாட்டில் பங்கேற்க சென்ற இந்திய பிரதமர் மோடி, ஆங் சான் சூகியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×