search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உண்மையான ’சர்ஜிக்கல் ஆப்ரேஷன்’ என்ன என்பதை இந்தியாவிற்கு காட்டுவோம்: பயங்கரவாதி ஹபீஸ் சயீத்
    X

    உண்மையான ’சர்ஜிக்கல் ஆப்ரேஷன்’ என்ன என்பதை இந்தியாவிற்கு காட்டுவோம்: பயங்கரவாதி ஹபீஸ் சயீத்

    உண்மையான ‘சர்ஜிக்கல் ஆப்ரேஷன்’ என்ன என்பதை இந்தியாவிற்கு காட்டுவோம் என்று பயங்கரவாதி ஹபீஸ் சயீத் மிரட்டிஉள்ளான்.
    லாகூர்:

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து அதிரடி தாக்குதல் நடத்திய விவகாரத்தில், இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்து உள்ள 2008 மும்பை தாக்குதல் சூத்திரதாரி, பயங்கரவாதி ஹபீஸ் சயீத்; உண்மையான ‘சர்ஜிக்கல் ஆப்ரேஷன்’ என்ன என்பதை இந்தியாவிற்கு காட்டுவோம் என்று பேசி உள்ளான். ‘சர்ஜிக்கல் ஆப்ரேஷனின்’ உண்மையான பொருள் என்ன என்பதை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தெரிந்துக் கொள்ள செய்வோம், பதிலடி கொடுப்போம் என்று பேசிஉள்ளான்.

    பாகிஸ்தானின் பைசாலாபாத்தில் பொது கூட்டம் ஒன்றில் பேசிய பயங்கரவாதி ஹபீஸ் சயீத், “உண்மையான ‘சர்ஜிக்கல் ஆப்ரேஷன்’ என்ன என்பதை உங்களுக்கு சொல்வோம்... நீங்கள் தக்க பதிலடியை விரைவில் எதிர்க்கொள்வீர்கள்,” என்று கொக்கரித்து உள்ளான்.

    “பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் எப்படி ‘சர்ஜிக்கல் ஆப்ரேஷன்’ நடத்துகிறார்கள் என்பதை பாருங்கள் என்று இந்திய மீடியாக்களிடம் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். உங்களிடம் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்... அமெரிக்காவால் கூட உங்களை காப்பாற்ற முடியாது.” என்று பேசிஉள்ளான் ஹபீஸ் சயீத். இப்போது பாகிஸ்தானின் முறையாகும், இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கவேண்டும். சர்ஜிக்கல் ஆப்ரேஷனின்’ உண்மையான பொருள் என்ன என்பதை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தெரிந்துக் கொள்ள வேண்டும்,” என்று பேசி உள்ளான்.

    மும்பையில் 2008–ம் ஆண்டு நவம்பர் 26–ந்தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் புகுந்து 10–க்கும் மேற்பட்ட இடங்களில் கொடூர தாக்குதல்கள் நடத்தி 150–க்கும் மேற்பட்டவர்களை கொன்று குவிக்க மூளையாக இருந்து வழிநடத்திய ஜமாத் உத் தாவா, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கங்களின் தலைவன்தான் இந்த ஹபீஸ் சயீத். ஐ.நா. பயங்கரவாதியாக அறிவித்து உள்ள ஹபீஸ் சயீத்தின் தலைக்கு அமெரிக்கா 1 கோடி அமெரிக்க டாலரை பரிசாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் பாகிஸ்தானில் இன்றுவரையில் சுதந்திரமாக திரிந்துக் கொண்டு, இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதிகளை தயாரித்து அனுப்பி வருகின்றான் பாகிஸ்தான் உதவியுடன்.
    Next Story
    ×