search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெக்ஸிகன் ஆற்றில் மர்மமான முறையில் இறந்த 12 பேரின் உடல்கள் கண்டெடுப்பு
    X

    மெக்ஸிகன் ஆற்றில் மர்மமான முறையில் இறந்த 12 பேரின் உடல்கள் கண்டெடுப்பு

    மெக்ஸிகோ நாட்டின் புகழ்பெற்ற லெர்மா ஆற்றிலிருந்து மர்மமான முறையில் இறந்த 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
    மெக்ஸிகோ:

    மெக்ஸிகோ நாட்டின் புகழ்பெற்ற லெர்மா ஆற்றிலிருந்து மர்மமான முறையில் இறந்த 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இரண்டு போதைப்பொருள் கும்பல்களுக்கிடையில் நடைபெற்ற சண்டையில் உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதில், 3 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டதாகவும், மீதமுள்ள 9 பேரின் உடல்கள் இந்த வாரத்தின் முதல் மூன்று நாட்களில் மீட்கப்பட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

    9 உடல்களில்  வன்முறை  தாக்குதலால் இறந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. மூன்று உடல்கள் எப்படி இறந்தது என்பது தெரியவில்லை.

    இறந்த உடல்களை அடையாளம் காண மெக்ஸிகன் நாட்டின் மிச்சோகன் மற்றும் குனஜூடோ மாநிலங்களை சேர்ந்தவர்களிடமிருந்து அதிகாரிகள் உதவி கேட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து மெக்ஸிகன் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மோதல் நடந்தது உண்மையெனில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×