search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.எச்-17 விமானம் ரஷ்ய ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது: விசாரணையில் தகவல்
    X

    எம்.எச்-17 விமானம் ரஷ்ய ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது: விசாரணையில் தகவல்

    மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்எச் 17 ரக விமானம் ரஷிய பகுதியில் இருந்து உக்ரைனுக்கு கொண்டு வரப்பட்ட ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று விசாரணை அதிகாரிகள் கூறி உள்ளனர்.
    ஆம்ஸ்டர்டாம்:

    நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.17 ரக பயணிகள் விமானம் ஒன்று கடந்த 2014 ஜூலை மாதம் 17ஆம் தேதி சென்றது.

    ரஷியா எல்லைப் பகுதி அருகே உக்ரைனில் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 15 விமான ஊழியர்கள் உட்பட பயணம் செய்த 298 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 2 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள்.

    MH17 விமான விபத்து  குறித்து சர்வதேச விசாரணை நடைபெற்று வருகிறது. விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து கிடைத்த சில துண்டுகள் ரஷ்யாவின் தரையில் இருந்து வானத்தில் தாக்கும் பக் (BUK) ஏவுகணை பாகங்களுடன் ஒத்துப்போவதாக ஏற்கனவே தெரியவந்தது.

    விமானத்தை ரஷ்யா ஆதரவு பிரிவினைவாதிகள் தான் சுட்டு வீழ்த்தினர் என குற்றம் சாட்டபட்டது அதற்கு ஆதாரபூர்வமான சான்றும் (ஏவுகணை பாகம்) கிடைத்தது. ஆனால், ரஷியா மேற்கத்திய நாடுகளை குற்றம் சுமத்தியது.

    இந்நிலையில் எம்எச் 17 ரக விமானம் ரஷிய பகுதியில் இருந்து உக்ரைனுக்கு கொண்டு வரப்பட்ட ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று விசாரணை அதிகாரிகள் கூறிஉள்ளனர்.

    நெதர்லாந்து தேசிய துப்பறியும் படை தலைவர் வில்பர்ட் பவுலிசென் இதுபற்றி பேசுகையில், “கிரிமினல் விசாரணையின் அடிப்படையில், எம்.எச்.17 விமானமானது ரஷியாவின் பக் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்ற முடிவுக்கு வந்து உள்ளோம், பக் ஏவுகணை 9M38 ரகத்தை சார்ந்தது.

    ஏவுகணையானது ரஷிய எல்லைப் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலுக்கு பின்னர் ரஷியாவிற்கே மீண்டும் லாஞ்சர் கொண்டு செல்லப்பட்டு விட்டது.

    ஸ்னிஸ்னி கிராமத்தின் தெற்கில் சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் விவசாயம் செய்யக் கூடிய பகுதியில் இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது.

    தாக்குதல் நேரத்தில் அந்தப் பகுதி ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது” என்று கூறி உள்ளார்.
    Next Story
    ×