search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் நடக்கும் சார்க் மாநாட்டில் பங்கேற்க மாட்டோம்: இந்தியா வழியில் வங்காளதேசம் திட்டவட்ட அறிவிப்பு
    X

    பாகிஸ்தானில் நடக்கும் சார்க் மாநாட்டில் பங்கேற்க மாட்டோம்: இந்தியா வழியில் வங்காளதேசம் திட்டவட்ட அறிவிப்பு

    பாகிஸ்தானில் நடக்கும் சார்க் மாநாட்டில் பங்கேற்க மாட்டோம் என இந்தியா வழியில் வங்காளதேசம் திட்டவட்டவமாக அறிவித்துள்ளது.
    டாக்கா:

    பாகிஸ்தானில் நடக்கும் சார்க் மாநாட்டில் பங்கேற்க மாட்டோம் என இந்தியா வழியில் வங்காளதேசம் திட்டவட்டவமாக அறிவித்துள்ளது.

    சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் 19-வது மாநாடு வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது.

    நவம்பர் 9, 10-ந்தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் தீவிரமாக செய்து வருகிறது. இஸ்லாமாபாத்தில் மாநாடு நடக்கும் அரங்கில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், சார்க் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதனிடையே, காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து இருநாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் சார்க் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்த தகவல் நேபாளத்தில் உள்ள சார்க் அமைப்பின் தலைமையகத்திற்கு இந்திய அரசின்சார்பில் கடிதம் மூலமாக தெரிவிக்கப்பட்டது.

    இந்தியா மட்டுமல்லாது, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளும் சார்க் மாநாட்டை புறக்கணிக்க உள்ளதாக சமீபத்தில் யூகங்கள் வெளியாகின. அந்த யூகத்தை வங்காளதேசம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

    இஸ்லாமாபாத் நகரில் நடக்கும் சார்க் மாநாட்டில் பங்கேற்க மாட்டோம் என வங்காளதேசமும் திட்டவட்டவமாக அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, நேபாளத்தில் உள்ள சார்க் அமைப்பின் தலைமையகத்திற்கு ஷேக் ஹசீனா தலைமையிலான வங்காளதேச அரசு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சார்க் அமைப்பை உருவாக்கிய உறுப்புநாடு என்ற வகையில் பிராந்திய கூட்டுறவு தொடர்பான பொறுப்புகளை நிறைவேற்றுவதில் வங்காளதேசம் உறுதியாக உள்ளது. ஆனால், பரஸ்பர உறவுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் ஒருநாடு தலையீடு வளர்ந்துவரும் நிலையில் சார்க் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும் சூழல் தற்போது இல்லை என்பதால் இந்த மாநாட்டில் வங்காளதேசம் பங்கேற்காது.

    வங்காளதேச அரசின்சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
    Next Story
    ×