என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தீவிரவாதத்தை எதிர்கொள்வது குறித்து இந்தியா- சீனா இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை
Byமாலை மலர்27 Sep 2016 1:01 PM GMT (Updated: 27 Sep 2016 1:01 PM GMT)
தீவிரவாதத்தை எதிர்கொள்வது தொடர்பாக இந்தியா-சீனா இடையிலான முதலாவது உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.
பீஜிங்:
பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் தீவிரவாத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கை தொடர்பாக இந்தியா சீனா இடையிலான முதலாவது உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.
சீனாவில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தீவிரவாதத்தை எதிர்கொள்வது மற்றும் சர்வதேச, உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக தகவல்கள் மற்றும் கொள்கைகள் இருநாடுகளுக்கு இடையே பரிமாற்றம் செய்யப்பட்டது.
இந்தியா சார்பில் கூட்டு புலனாய்வு குழு தலைவர் ஆர்.என்.ரவி மற்றும் சீனாவின் மத்திய அரசியல் மற்றும் சட்ட விவகாரங்கள் ஆணைய செயலாளர் வாங் யாங்யிங் ஆகியோர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
மேலும் இருதரப்பிலும் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலை இணைந்து எதிர்கொள்வது தொடர்பாக முக்கிய கருத்தொற்றுமை ஏற்பட்டதாகவும், முக்கிய பிரச்சினைகள் குறித்து இருநாடுகளின் புரிதலை மேம்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் தீவிரவாத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கை தொடர்பாக இந்தியா சீனா இடையிலான முதலாவது உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.
சீனாவில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தீவிரவாதத்தை எதிர்கொள்வது மற்றும் சர்வதேச, உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக தகவல்கள் மற்றும் கொள்கைகள் இருநாடுகளுக்கு இடையே பரிமாற்றம் செய்யப்பட்டது.
இந்தியா சார்பில் கூட்டு புலனாய்வு குழு தலைவர் ஆர்.என்.ரவி மற்றும் சீனாவின் மத்திய அரசியல் மற்றும் சட்ட விவகாரங்கள் ஆணைய செயலாளர் வாங் யாங்யிங் ஆகியோர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
மேலும் இருதரப்பிலும் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலை இணைந்து எதிர்கொள்வது தொடர்பாக முக்கிய கருத்தொற்றுமை ஏற்பட்டதாகவும், முக்கிய பிரச்சினைகள் குறித்து இருநாடுகளின் புரிதலை மேம்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X