என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எகிப்தில் இருந்து அகதிகள் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 160 உடல்கள் மீட்பு
Byமாலை மலர்24 Sep 2016 3:10 AM GMT (Updated: 24 Sep 2016 3:10 AM GMT)
எகிப்தில் இருந்து அகதிகளை ஏற்றிக்கொண்டு இத்தாலி நோக்கி சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 160 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன
கெய்ரோ:
எகிப்தில் இருந்து அகதிகளை ஏற்றிக்கொண்டு இத்தாலி நோக்கி சென்ற படகு கடந்த 21-ந் தேதி ‘பர்க் ரஷத்’ என்ற இடத்துக்கு அருகே கடலில் கவிழ்ந்தது. அதில் 450 முதல் 600 பேர் வரை இருந்தனர். விபத்துபற்றி தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் படகுடன் விரைந்து சென்றனர். அவர்களில் 163 பேரை மட்டுமே மீட்க முடிந்தது. படகு கடலில் மூழ்கியதில் 350-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடலில் மூழ்கியவர்களை தேடும் பணி நடந்து வந்தது.
இந்த நிலையில் கடலில் மூழ்கிய 160 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. விபத்து நடந்த படகில் எகிப்து, சூடான் மற்றும் சோமாலியா நாட்டைச் சேர்ந்த அகதிகள் சட்டவிரோதமாக பயணம் செய்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக 4 பேரை எகிப்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எகிப்தில் இருந்து அகதிகளை ஏற்றிக்கொண்டு இத்தாலி நோக்கி சென்ற படகு கடந்த 21-ந் தேதி ‘பர்க் ரஷத்’ என்ற இடத்துக்கு அருகே கடலில் கவிழ்ந்தது. அதில் 450 முதல் 600 பேர் வரை இருந்தனர். விபத்துபற்றி தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் படகுடன் விரைந்து சென்றனர். அவர்களில் 163 பேரை மட்டுமே மீட்க முடிந்தது. படகு கடலில் மூழ்கியதில் 350-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடலில் மூழ்கியவர்களை தேடும் பணி நடந்து வந்தது.
இந்த நிலையில் கடலில் மூழ்கிய 160 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. விபத்து நடந்த படகில் எகிப்து, சூடான் மற்றும் சோமாலியா நாட்டைச் சேர்ந்த அகதிகள் சட்டவிரோதமாக பயணம் செய்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக 4 பேரை எகிப்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X